அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

‘அறிவியல்


செவ்வாயை ஆராயப் போகும் ஆய்வு ஊர்தி!

Font size:   
செவ்வாயை ஆராயப் போகும் ஆய்வு ஊர்தி!
சவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்வதற்கான புதிய நவீன ஆய்வு ஊர்தியை அமெரிக்காவின் `நாசா’ உருவாக்கியுள்ளது. `கிïரியாசிட்டி ‘((Curiosity)) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஊர்தியில் உள்ள `சாம்’ (sam) என்ற நவீன அமைப்பு குறிப்பிடத்தக்கது. `சாம்பிள் அனாலிசிஸ் அட் மார்ஸ்’ (Sample Analysis at Mars) எனப்படும் `சாம்’, கிரீன்பெல்ட்டில் உள்ள கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டரில் வடிவம் பெற்றுள்ளது.
இந்த `கிïரியாசிட்டி’ ஆய்வு ஊர்தி முந்தைய ஆய்வு ஊர்திகளை விட நவீனமானது மட்டுமல்ல, ஒரு முக்கியமான ஆய்விலும் ஈடுபடப்போகிறது. அதாவது, பூமிவாழ் உயிரினங்களின் கட்டுமானப் பொருட்களான `ஆர்கானிக் மாலிக்ïல்கள்’ செவ்வாய்க் கிரகத்தில் காணப்படுகின்றனவா என்று ஆராயப் போகிறது. அந்த ஆய்வை `சாம்’ மேற்கொள்ளும்.
மேற்கண்ட `ஆர்கானிக் மாலிக்ïல்களில்’ கார்பன், ஹைட்ரஜன் மற்றும் கூடுதல் மூலகங்கள் காணப்படுகின்றன. எந்த உயிரும் இவை இல்லாமல் இருக்க முடியாது.
மிக இலேசான `ஆர்கானிக்’ தடயத்தையும் `கிïரியாசிட்டி’யால் கண்டுபிடிக்க முடியும். முன்பு செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட வேறு எந்த ஆய்வு ஊர்தியையும் விட பல்வேறு வகையான ஆர்கானிக் மூலக்கூறுகளையும் இதனால் கண்டுபிடிக்க முடியும். மேலும் உயிருக்கான வேறு தடயங்கள், முந்தைய சூழ்நிலைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வல்லது.
கிïரியாசிட்டியில் உள்ள `சாம்’ மற்றும் 9 நவீன உபகரணங்கள், செவ்வாய்க் கிரகத்தின் எந்தப் பகுதியிலாவது உயிர் வாழ்வதற்கான சூழல் உள்ளதா, அக்கிரகத்தில் எப்போதாவது உயிர்கள் காணப்பட்டனவா என்றும் ஆய்வு செய்து தெரிவிக்கும்.
இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்படும் `கிïரியாசிட்டி’, செவ்வாய் நிலப்பரப்பில் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போய் இறங்கும். அங்கு இரண்டாண்டு காலத்துக்கு இந்த ஊர்தி ஆய்வில் ஈடுபடப் போகிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

‘அறிவியல்’


Archive for the ‘அறிவியல்’ Category

அதிக விசம் கொண்ட உலகின் மிகச்சிறிய தவளை.!

அதிக விசம் கொண்ட உலகின் மிகச்சிறிய தவளை.!
தென் அமெரிக்கா காடுகளுக்குள் காணப்படும் மிகச்சிறிய தவளை அதிகளவிலான விசத்தன்மை கொண்ட உலகின் மிகச்சிறிய தவளையாக கருதப்படுகிறது. ஒரு பென்சில் கூர் முனையில் அமர்ந்திருக்க கூடிய அளவில் இந்த தவளை இனம் காணப்படுகிறது.  அளவில் மிகச்சிறியதாக காணப்பட்டாலும் இதன் தோலில் காணப்படும் விசத்தின் தன்மை மிகப்பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனக்கூறப்படுகிறது.  எந்தப்பருவத்திலும் இதனுடைய வளர்ச்சி வெறும் சென்ரிமீற்றர் அளவே காணப்படுகிறதாம். தற்போது இவ்வகை தவளை இனங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக ஆபத்தான தொங்கு பாலம்..!(படங்கள் இணைப்பு)

உலகின் மிக ஆபத்தான தொங்கு பாலம்..!(படங்கள் இணைப்பு)
உலகின் மிக ஆபத்தான பாலமாக பாகிஸ்தானில் காணப்படுகின்ற தொங்கு பாலம் கருதப்படுகின்றது.  இது பாகிஸ்தானின் வடபகுதியில் அமைந்துள்ளது.  இந்த தொங்கு பாலமானது மிகவும் பழமை வாய்ந்தாத காணப்படுவதாலும்  அதனுடைய பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளமையினாலும் உலகிலயே மிகவும் ஆபத்து நிறைந்த தொங்கு பாலமாக இப்பாலம் கூறப்படுகின்றது.

அசைவம் உண்னும் ஆபத்தான காளான்கள்

அசைவம் உண்னும் ஆபத்தான காளான்கள்
காளான்களில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் தவிர, அசைவம் உண்ணும் காளான்களும் உள்ளன. இவை பூஞ்சனம் வகையைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் அமைப்பு இழை களால் ஆனதாக உள்ளது. இந்த வகைக் காளான்களில் ஒன்று, கோதுமைப் பயிரைத் தாக்கும் நூற்புழுவை உண்டு உயிர் வாழ்கிறது. அசைவம் உண்ணும் காளான் களில் சிலவகை, ஒரு குறிப்பிட்ட இனப் பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. வேறு சில காளான்களோ, புழுக்களைப் பிடிப்பதற்கு ஏற்ற தகுந்த பொறிகளைப் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கின்றன. [...]

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்??

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்??
முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும். புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் [...]

உலகிலயே கடலுக்குள் அமைக்கப்பட்ட மிக நீளமாக பாலம்!(படங்கள் உள்ளே)

உலகிலயே கடலுக்குள் அமைக்கப்பட்ட மிக நீளமாக பாலம்!(படங்கள் உள்ளே)
உலகில் கடலுக்குள் அமைக்கப்பட்ட மிக நீளமான பாலம் கிழக்கு சீனாவின் Shandong மாகாணத்தில் Huangdao மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இப்பாலம் மூன்று பாலங்களும் ஒன்றாக வந்து சந்திப்பதாக அமைந்துள்ளது. இது 26.4 மைல் துாரத்திற்கும் அதிக நீளமுடையதாக காணப்படுகிறது. இந்தப்பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக சுமார் 4 வருடங்கள் செலவாகியுள்ளதோடு 5.5 பில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளதாம். 2011ம் ஆண்டு மக்கள் போக்குவரத்து செய்யக்கூடியவாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மனிதனை கொல்லும் விசம்கொண்ட தங்கத்தவளைகள்!(வீடியோ உள்ளே)

மனிதனை கொல்லும் விசம்கொண்ட தங்கத்தவளைகள்!(வீடியோ உள்ளே)
நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். “தாவும் தங்கத் தவளை’ என்று அழைக்கப்படும் இந்த, “கோல்டன் டார்ட் பிராக்’ கொலம்பியா [...]

உலகில் கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம்.

உலகில் கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம்.
உலகில், கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம் பஹாமாஸ் நாட்டிலேயே அமைந்துள்ளது. விஞ்ஞான வசதிவாய்ப்பின் ஒரு அங்கமாக இந்த தபால் நிலையம் 1939ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் நாள் திறக்கப்பட்டது. இந்த கடல்கீழ் தபால் நிலையமானது, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோன் எர்னெஸ்ட் வில்லியம்ஸ்சன்(1881-1966) அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். கடல்கீழ் புகைப்படத்துறையின் முன்னோடியாகவும் வில்லியம்ஸ்சன், நினைவுகூரப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை, பசுபிக் சமுத்திர தீவாகிய வனுவாட்டு தேசத்தில் 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட, கடல்கீழ் தபால் நிலையத்தில் தபால் உறைகளும், [...]

உலகில் மிகப்பெரிய பூ..!!

உலகில் மிகப்பெரிய பூ..!!
உலகில் மிகப்பெரிய பூவாக ரப்லீசியா விளங்குகின்றது. ரப்லீசியாவானது 5 இதழ்களைக் கொண்ட பூவாகும். இந்த பூவின் விட்டமானது 106 சென்ரிமீற்றரிலும் [3அடி] அதிகமாகும். அத்துடன் இந்த பூவின் நிறையானது 10கிலோவிலும் அதிகமாகும். இப்பூவின் நடுவிலுள்ள கிண்ணம் போன்ற பகுதியில் 10லீட்டர் தண்ணீர் ஊற்றலாம். செடியிலோ, மரத்திலோ இந்தப் பூ பூப்பதில்லை.இதொரு ஒட்டுண்ணி. இந்தப் பூ முழுமையாக வளர்ச்சியடைந்து மலர்வதற்கு ஒரு மாதமாகும். பின்னர் இந்தப் பூவானது 5-7 வரையான குறுகிய நாட்களையே வாழ்நாளாகக் கொண்டதாகும். ரப்லீசியாவானது இந்தோனேசியாவின் தீவுகளான [...]

முத்தை உண்ணும் ஒரே உயிரினம்!

முத்தை உண்ணும் ஒரே உயிரினம்!
உலகில் அன்னப்பறவை பற்றி அறியாதவர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு பழங்கால புராணக்கதைகள் தொடக்கம் சிறுவர்களின் நீதிக்கதைகள் என எல்லாவற்றிலும் அன்னப்பறவை பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக சொல்லுவர்கள் நாம் சிறந்த மனிதர்களாக வரவேண்டுமெனில் அன்னப்பறவை போல வாழ பழகவேண்டும் என. அதற்கு காரணம் அன்னமானது பாலையும் தண்ணீரையும் கலந்து வைக்கின்ற போது அது இரண்டையும் வெவ்வேறாக பிரிந்து பாலை மட்டும் பருகுமாம். அதைப்போல நாம் சமுதாயத்தில் தீயவற்றை ஒதுக்கிவிட்டு நல்லவற்றையே செய்யவேண்டும் என சொல்வதுண்டு. சரி அது சிறுவர்கள் [...]

‘சுவாரஸ்யம்’


இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!


என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
இந்த மாசம் காதல் மாசம்:) அத்தோடு இசையும் சேர்ந்தால் பொருத்தமாக தான் இருக்கும் இல்லையா?

இளையராஜா எவ்வளவு எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே இதில்சொல்லிட்டேன்...:))


இசை ஞானியின் இசையில் நான் ரசித்த சில சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.................


1.இசைமேதை பீத்தோவனின்  "fur elise " ட்யூன் கேட்ருக்கீங்களா?? கேட்காட்டி இப்ப கேளுங்க..time 1.13 to 1.27 இல் பியானோ கட்டைகள் வேகம் எடுத்து புகுந்து விளையாடி 1.42 இல் அப்படியே டெம்போ குறைந்து முடியும் ஆர்ப்பரிப்பு இருக்கே....இந்த ட்யூனின் ஹார்மனியில் என் ஓராயிரம் மன அலைகள் அப்படியே அடங்கி விடும் சுகானுபவத்தில் பலமுறை லயிச்சிருக்கேன்...


அப்டியே இளையராஜா இசைக்கு வருவோம்...ஏற்கனவே நான் இளையராஜா சார் இன் இசையில் மந்திரிச்சு விட்ட பொண்ணு :) அதுவும் மௌனராகம் தீம் மியூசிக் எல்லாம்............சான்ஸ் ஏ இல்ல..வயலினின் அதி அற்புத ரீங்காரம் அப்படியே இசையை தெறிச்சு நம் இமை ஓரமாய் வந்து விழும் மேஜிக் தருணம் அது.... கேட்க ஆயிரம் காதுகள் இருந்தாலும் பத்தாது....


பீத்தோவனின் "fur elise " & இளையராஜாவின்  மௌனராகம் "தீம்மியூசிக்" -ஐயும் சேர்த்து fusion போலே பரிமளிக்கும் இந்த இசை கோப்பை கேளுங்க..... யாரு ட்யூன் பெஸ்ட்...?????????? :))







2.இசைஞானியின் அதி தீவிர ரசிகர்களால் (என்னை மாதிரி :) ) இந்த பாட்டு தான் ரொம்பவே அதிகமாய் விரும்பப்பட்டு இருக்கும் னு நினைக்கிறேன்..." தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா) ."

இது கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி னு பலமொழிகளில் மட்டும் அதே ட்யூன் மாறாமல் வந்தாலும்..கேட்க என்னைக்குமே திகட்டாத அக்மார்க் இசை தேன்...

எந்த மொழியும்,வரிகளும் தேவைப்படாத,ஜஸ்ட் இந்த பாடலின் ட்யூன் மட்டும் இதோ...எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...முக்கியமாய் அந்த interlude ..ம்ம்...வார்த்தைகளே இல்லை ராஜா சார்...








3.அப்புறம் ராஜா சார் பாடி தமிழ் இல் கேட்டு இருப்போம் நிறைய..வேறு மொழியில் ராஜா சார் இன் குரலில் கேட்கும்போது தன்னிச்சையா ஒரு சுவாரஸ்யம் வந்திருது...

இந்த "கன்னடா" பாட்டில் ராஜாவின் குரலை கேட்டு பலமுறை அசந்திருக்கேன். சமஸ்கிருதத்தில் தெள்ள தெளிவாய் அப்படிங்கிறதை  " ஸ்பஷ்டமாய் " னு சொல்லுவாங்க..ராஜா சார் இன் ஸ்பஷ்டமான கன்னடா சாங் இதோ..அவரின் ட்ரேட் மார்க் "ந..நா.."ஹம்மிங்கோடு ..:))


  16/16 


Archive for the ‘சுவாரஸ்யம்’ Category

மரத்தால் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்.(படங்கள் இணைப்பு)

மரத்தால் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்.(படங்கள் இணைப்பு)
மரத்தால் ஸ்கூட்டரா? சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டாலும் அதை கண்காட்சிக்கு தான் கொண்டு வைக்கலாம் வீதியில் எல்லாம் ஓட்டிச்செல்லமுடியாது. இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது எம்மை.  ஆனால் எம் சிந்தனைகளுக்கு மேலாக சிந்தித்து சாதித்து காட்டியிருக்கிறார் ஒரு தச்சுத்தொழிலாளி. போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த Carlos Alberto என்ற தச்சன் மூலமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. ஒரு முறை தன்னுடைய திறமையை வெளிகாட்ட வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தாராம் இந்த தச்சன்.  அப்போதுதான் அவர் மனதில் உதித்திருக்கிறது தனது பழைய ஸ்கூட்டர். அதைப்போலவே [...]

ராட்சத தவளை வேட்டை…!(படங்கள் இணைப்பு)

ராட்சத தவளை வேட்டை…!(படங்கள் இணைப்பு)
ராட்சத மிருகங்களை வேட்டையாடுவதைப்போலவே ராட்சத தவளைகளையும் வேட்டையாடுகின்றனர்.  மிகப்பெரிய அளவிலாக காணப்படும் இவ்வாறான ராட்சத தவளைகளை வேட்டையாடி அதனை கைகளில் துாக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள். ஆனால் இவ்வேட்டை உணவுக்காகவா அல்லது வேறு தேவைக்காகவா என்பது தெரியவில்லை.

உலகின் மிகச்சிறிய மீன்..!!

உலகின் மிகச்சிறிய மீன்..!!
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுப்பகுதியல் உலகின் மிகச்சிறிய மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐனவரி மாதம் 2006 ம் ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.  7.9மில்லி மீற்றர் அதாவது வெறும் 0.3இஞ்சி நீளம் உடையதாகவே இம்மீன் காணப்படுகிறது. சாதாரணமாக 7மில்லி மீற்றர்களே இம்மீன் வளரக்கூடியனவை எனக்கூறப்படுகிறது. இது ஓர் நண்டு இனத்தைச்சேர்தவை எனவும் கருதப்படுகிறது.

முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்!

முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்!
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஆல்மெடா டி லா கெஸ்டா என்ற கிராமத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர். கடந்த 1940-ம் ஆண்டில் இங்கு 500 குடும்பங்கள் இருந்தன. அப்போது பெரும்பாலானவர்கள் வேலை தேடி இங்கிருந்து வெளியேறினர்.  அதன் பிறகு திரும்பவில்லை. தற்போது இங்கு 15 குடும்பத்தினரே உள்ளனர். அவர்கள் அனைவரும் 65 வயது முதல் 70 வயதுக்கு மேல்தான் உள்ளனர். இதனால் அங்கு 40 வருடங்களாக புதிதாக குழந்தைகளே பிறக்கவில்லை. இப்போது இங்கு இருப்பவர்களில் 65 [...]

அமெரிக்காவில் பாம்பு வீடு விற்பனைக்கு!

அமெரிக்காவில் பாம்பு வீடு விற்பனைக்கு!
அமெரிக்காவில் இடாகோ மாகாணத்தில் உள்ள ஒரு பாம்பு வீட்டை விற்பனை செய்ய முயற்சி நடந்து வருகிறது. திரைப்படங்களில் “பேய்’ வீடுகளை பார்த்திருப்போம். வித்தியாசமாக, அமெரிக்காவில் உள்ள இடாகோ மாகாணத்தில் “பாம்பு’ வீடு ஒன்று உள்ளது. தப்பித் தவறி ஒரு பாம்பு நமது வீட்டு தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டாலே, அன்றிரவு நமக்கு தூக்கம் வராது. ஆனால், இந்த வீட்டில் ஆயிரக்கணக்கான பாம்புகள் வசிக்கின்றனவாம். வீட்டுக் கூரை, சுவர் என்று எங்கு பார்த்தாலும் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றனவாம். வங்கியில் கடன் வாங்கி, [...]

உலகில் முதன் முறையாக செயற்கை இடுப்பு பொருத்தப்பட்ட புலி

உலகில் முதன் முறையாக செயற்கை இடுப்பு பொருத்தப்பட்ட புலி
ஜெர்மனியில் உள்ள ஹாலே மிருகக்காட்சி சாலையில் 8 வயதான அரிய வகை மலேயன் பெண் புலி உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாகவே, அதன் வலது பக்க இடுப்பு பகுதியில் இனம் புரியாத வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானது. புலியை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த புலிக்கு செயற்கை இடுப்பு பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 5 டாக்டர்கள் ஒன்று சேர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை [...]

3 அடி மணமகன், 2.5 அடி மணமகள் திருமண பந்தத்தில்!

3 அடி மணமகன், 2.5 அடி மணமகள் திருமண பந்தத்தில்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன் ஞானஜோதி (27). இவரது உயரம் 3 அடி மட்டுமே. இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர், பெண் பார்த்தனர். அப்போது, புலவன்குப்பத்தை சேர்ந்த சுப்பராமன் மகள் சங்கீதாவும் (21) உயரம் குறைந்தவர் என்ற தகவல் கிடைத்தது. சங்கீதா 2.5 அடி உயரம் உடையவர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, திருமண நாள் குறிக்கப்பட்டது. அதன்படி, பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள [...]

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து வாலிபர்

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து வாலிபர்
இங்கிலாந்தை சேர்ந்தவர் தலே ரைட். இவர் தனது 14  வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலேயே மிக குறைந்த வயதில் தந்தை ஆனார் என்ற  பெருமையை பெற்றார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. இவரது 14 வயது மகள் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறாள். அவள் தன்னுடன் படிக்கும் 15 வயது மாணவனை காதலித்து வருகிறாள். அவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். அதன் விளைவாக தலே ரைட்டின் மகள் [...]

குழந்தைகளுக்கு அபின் கொடுத்து வளர்க்கும் ஆப்கன் தாய்மார்கள்!

குழந்தைகளுக்கு அபின் கொடுத்து வளர்க்கும் ஆப்கன் தாய்மார்கள்!
வடக்கு ஆப்கானிஸ்தானில் தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு அபினை (ஓபியம்) ஊட்டி வளர்க்கிறார்கள். அஜீசா தனது 4 வயது மகன் உமைதுல்லாவிற்கு தினமும் காலை உணவாக கைநிறைய சுத்த அபின் தருகிறார். இதுதான் அவனுக்கு மருந்தும் கூட என்கிறார் அஜீசா. அஜீசா பால்க் மாகாணத்தில் கம்பளம் நெசவு செய்யும் ஏழைக் குடும்பத்தில் வந்தவர். அவர் படிக்காதவர். உடல் நலக் கேடுகள் பற்றியோ அல்லது அபின் அடிமையாக்கிவிடும் என்பதோ அவருக்கு தெரியவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், “நான் அவனுக்கு அபின் கொடுக்கவில்லை [...]

பிறந்து 19வது நாளில் தொலைந்தவர் 23 ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் சேர்ந்த பெண்!

பிறந்து 19வது நாளில் தொலைந்தவர் 23 ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் சேர்ந்த பெண்!
பிறந்த 19வது நாளில் தொலைந்த பெண் குழந்தை, 23 வயது இளம்பெண்ணாக பெற்றோருடன் இணைந்த அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்தவர் ஜாய் ஒயிட். அவரது மனைவி கார்ல் டைசன். 1987 ஆகஸ்ட் மாதத்தில் மன்ஹாட்டன் மருத்துவமனையில் கார்ல் டைசனுக்கு பெண் குழந்தை பிறந்தது. கார்லினா ஒயிட் என பெயரிட்டனர். கார்லினா பிறந்த 19வது நாளில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க நர்ஸ் ஒருவர் எடுத்துச் சென்றார். பிறகு அவர் திரும்பவில்லை. பெற்றோர் புகார் செய்ததும், [...]