அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Sunday, February 20, 2011

விஞ்ஞானப்பூர்வமாக ஊழல்


கலைஞர் கருணாநிதி விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவரா..?


11-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'இரண்டு ஆடுகள் முட்டிக் கொண்டால் நரிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றிப் போட்டுப் படியுங்கள். 'இரண்டு நரிகள் முட்டிக் கொண்டால் ஆட்டிற்குக் கொண்டாட்டம்' என்று..!!!

நேற்றைக்கு ஜெயலலிதா விடுத்திருக்கும் ஒரு அறிக்கையைப் படித்தபோது இதுதான் எனக்குத் தோன்றியது.. கருணாநிதி ஜெயலலிதாவைத் திட்ட, ஜெயலலிதா பதிலுக்கு கருணாநிதியைத் திட்ட.. இப்படி இரண்டு பேரும் மாறி, மாறி ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு காட்டிக் கொடுப்பதால், இவர்கள் செய்த அரசியல் கொள்ளைகளும், தில்லுமுல்லுகளும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன. 

அந்த வரிசையில் ஜெயலலிதா நேற்று விடுத்திருக்கும் அறிக்கையினால் கருணாநிதியை “விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்” என்று நீதிபதி சர்க்காரியா ஏன் குறிப்பிட்டார் என்பதற்கான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. நீங்களும் படித்துப் பாருங்கள்..!

"மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என்று வருகிறபோது, 1969-ம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்றுவரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி.

ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மூன்றாவது மனைவியான திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ.57,000 விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் திருமதி தர்மா.

இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே.கபாலிக்கு விற்றுவிட்டார்  திருமதி தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே.கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற திருமதி தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன்னால் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்.

அதே நாளன்று, டி.கே.கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு திருமதி தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்கியம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். திருமதி தர்மாவின் தாயார்தான் இந்த சிவபாக்கியம்!! அதாவது கருணாநிதியின் மாமியார். இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.

20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்கியம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், தன்னுடைய சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் கையிருப்புத் தொகை ரூ 63,000 என்றும் திருமதி தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ.57,000 கொடுத்துதான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது.

கடனாகப் பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தின்படி, கடனாக வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்திட்டு இருக்கிறார்.

பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் திருமதி தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுவிட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், திருமதி தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞானபூர்வமான ஊழல்கள்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்திற்கு, அரிதான 2-ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையான ரூ. 1,537 கோடிக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அளித்தார். இதற்குப் பிறகு, டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ 4,200 கோடிக்கு விற்றது.

இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் எஜமானரும், குருவுமான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் லஞ்சம் கொடுத்தார். ஆனால், இந்தப் பணம் நேரடியாக கொடுக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ 25 லட்சம் முதல் ரூ 100 கோடி வரை, சேர்த்து, மொத்தம் ரூ 209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான குசேகான் ஃப்ரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ் என்ற நிறுவனத்திற்கு பால்வா மாற்றியிருக்கிறார்.

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ. 206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறது. இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010ம் ஆண்டைய இருப்பு நிலைக் குறிப்பை பார்க்கும்போது, கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியும் சேர்ந்த 80 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த கலைஞர் டி.வி.க்கு உத்திரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் ஒத்திருப்பதுதான் இதில் விசேஷமான ஒன்று. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை. அதே மூளைதானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!.

கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்பொழுதுதான் நீதி நிலைநாட்டப்படும்..”

- இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமதி தர்மா, சிவபாக்கியம், டி.கே.கபாலி ஆகியோர் இணைந்த கூட்டணியின் விற்றல், வாங்கல் கதையை பதினைந்து முறைக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். தலைதான் சுற்றுகிறது..!

யாரேனும் அறிவுஜீவிகள் அதனைப் படித்து அதற்குச் சரியான விளக்கமளித்தால் சந்தோஷப்படுவேன்..!

இதுக்கெல்லாம் எங்கிட்டு போய் விஞ்ஞானத்தைப் படிச்சிட்டு வர்றது..? சொல்லுங்க..!!!

  


மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்



மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்


ந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.

னால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.

மிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை  - நன்றி எஸ்.ரவீந்திரன்.

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

 னி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

 ன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
வாக்காளர்கள் ஆகிய நாம் இன வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

கலைஞரின் நியூ ராஜராஜசோழன்


கலைஞரின் நியூ ராஜராஜசோழன்!

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களைக் கலைஞர் டிவி கச்சிதமாக ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். தைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் இருந்தே,
திட்டமிட்டவகையில் இந்தப் பிரச்சாரப் பணி வெகு இயல்பாக ஆரம்பித்துவிட்டதாகவும், இம்முறை தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒலிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் பாடல் ஒன்று, கலைஞர் டிவியில் ரசிகன் நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், அதே தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் விபரம் அறிய வீடியோவில் ஏட்டாவது நிமிடத்தில் வரும் பாடலைக் கேளுங்க
நீங்க பார்த்த பாடலுக்கும் இனிவரும் விளம்பரத்துக்கும், கருத்து ஒற்றுமை இருக்கிறது கண்டுபிடியுங்க பார்க்கலாம்...
முடியல்லையா..? பேசாம விடுங்க...உங்க தலைமேல் எழுத்த மாத்த முடியாது.
.

கலைஞரும், பிரதமரும் சொல்வது உண்மையானால்...?


கலைஞரும், பிரதமரும் சொல்வது உண்மையானால்...?

தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளில் கூட்டணிக் கட்சிகளின் இறுதிக்கட்டப் பேச்சுக்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய திருப்பமாக
திமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பாமகவின் கோரிக்கைகளுக்கு திமுக தலைமை போக்குக் காட்டி வந்தாலும், தற்போதுள்ள சூழலின் தீவிரம் புரிந்து, பாமகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கி பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது திமுக. திமுக தலைமையின் அரசியல் தகமைக்கும், தந்திரோபாயத்தக்கும் எடுத்துக்காட்டான நடவடிக்கை இது என்கிறார்கள்.
யார் யாரை, எப்போது தூற்ற வேண்டும், எப்போது போற்ற வேண்டும் என்பதைத் தெளிவாகச் செய்வார் திமுக தலைவர் கலைஞர்.  அதிமுகவின் கூட்டணி விபரம் குறித்து முழுமையாக வெளிவராத சூழலில் பாமக அதிமுக பக்கம் சார்ந்து விடலாமா என்ற நிலையில், பாமக 35 தொகுதிகள் கேட்டக, 31 தொகுதிகளை ஒதுக்கி, பேரத்தைச் சுமுகமாக்கி, திமுகவின் கூட்டணிப் பலத்தை உறுதிப்பத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரவதாகத் தெரிய வருகிறது. பாமக, திமுக, கூட்டு உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸுடனான கூட்டும் உறுதியாகும் என்பதே உண்மை நிலை.
ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே கலைஞரும், பிரதமரும் மாறிமாறித் தெரிவித்து வருகின்றார்கள். இரு கட்சிகளுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் பல இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும்,  தேர்தல் கூட்டு விடயத்தில் இணக்கிப் போவார்கள் என்பதே வெளிப்படை. இவ்வாறு பாமக, திமுக, காங்கிரஸ், வி.சிறுத்தைகள் என்ற முக்கிய கட்சிகளுடன் கூட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தேர்தல் வெற்றியும் இந்தக் கூட்டணிக்கே என்பதும் உறுதியாகிவிடும்.
இவ்வாறான சூழலில் அதிமுக வின் கூட்டணி முழுமையடையாத போதிலும்,  பலவீனமான கூட்டணியாகவே தற்போதைக்கு தெரிகிறது.  அதிமுவுடனான  தேர்தல் கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், மனித நேய மக்கள் கட்சியினருக்கு இடையில், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி19 தொகுதிகள் கேட்கின்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 15 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே இரு தொகுதிகளுடன் ஒப்பந்தம் கண்ட, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி திடீரென 9 தொகுதிகள் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிமுக வின் ஒதுக்கீடு பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்படாத நிலையில், உதிரிக்கட்சிகளுடன் பேச்சவார்த்தைகளை மேற்கொண்டிருப்பது, நடிகர் விஜயைஆதரவு சக்தியாக இழுத்துவர முயற்சிப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டிருந்த போதும்,  அதிமுக கூட்டணி என்பது பலவீனமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விஜய்காந்தின் தேமுதிகவிற்கும், அதிமுகவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்ற போதும், ஒரு உறையில் இரு வாள்கள் இருக்க முடியாது என்பது போன்ற நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் இருந்து இறங்கி வராது இருப்பதனாலேயே இக் கட்சிகளுக்கிடையில் இதுவரையில் கூட்டு இடம் பெறவில்லை. திமுகவின் கூட்டணி பலமாக அமைந்து வரும் நிலையில், இந்த இரு கட்சிகளின் தலைமைகளும், போர்வாள்கள் எனத் தம்மை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வதை விட்டு, விட்டுக் கொடுப்புக்களுடன் விரும்பிக் கூட்டணி வைத்துக் கொண்டால் மட்டுமே, வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் மாற்றம் ஏற்படுத்தும் தேர்தலாக அமைய முடியும் என எதிர் பார்க்கலாம்.  அவ்வாறு அமையாத நிலையில், கலைஞர் கருணநிதியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்துத் தெரிவிக்கும் உடன்பாடுகள் உண்மையானால், எல்லாவித ஊழல்களும் மறக்கப்பட்டு, அல்லது மறைக்கப்பட்டு,  திமுக கூட்டணியின் அதிரடி வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்றே சொல்ல வேண்டியுள்ளது
.

ஆண் யார்? , பெண் யார்? கண்டுபிடியுங்கள் (படங்கள்)


ஆண் யார்? , பெண் யார்? கண்டுபிடியுங்கள் (படங்கள்)

AddThis Social Bookmark Button
கீழே இருக்கும் 6 ஜோடிகளில் ஒவ்வொன்றிலும் யார் ஆண்கள் யார் பெண்கள் என உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
வித்தியாசம் தெரியவில்லையா? இதிலிருக்கும் அனைவருமே ஆண்கள். இவர்கள் தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கை போட்டியிலும் கலந்து கொண்டனர்.

அண்மையில் தாய்லாந்து விமான சேவையொன்று 6 திருநங்கைகளை ஏர் ஹாஸ்டஸாக வேலைக்கு அமர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகல துவக்க விழா சில கிளிக்ஸ் (படங்கள்)

ஆணிகளால் ஒரு ஓவியம் (படங்கள்)

இந்தியாவில் புலித்தாக்குதல் (படங்கள்)

இறுதிப் புகைப்படங்கள்

கிரிக்கெட்டின் பிரம்மாக்கள் இவர்களா..? (ஒரு பிறப்பின் தரிசனம் படங்களில்)

விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் (படங்கள்)

இனி வரப்போகும் விமானங்களின் வடிவம் (படங்கள்)


ஆசான்


ஆசான்!

AddThis Social Bookmark Button
உங்கள் எண்ணங்களையும் எமக்கு தெரிவியுங்கள்! மனமே வசப்படு வண்ணப்படங்களாக அவற்றை மாற்ற முனைகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி www. jeyaseelank.blogspot.com
மனதிற்கினிய  வாசகங்கள், உளம் மகிழும் காட்சிகள், இணைந்து வருகையில் வசப்படும் மன