அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

அறிவான சந்ததிகள் - 2


அறிவான சந்ததிகள் - 2




மனித மூளை ஒரு மாபெரும் அதிசயம்.புத்திசாலித்தனம்,அறிவு என்பது மூளையில் உள்ள நியுரான்கள் எங்ஙனம் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்பதைபொறுத்தே அமைந்து இருக்கிறது .60000மில்லியனுக்கும் அதிகமான நியுரான்கள் மனித மூளையில் அமையப்பட்டுள்ளது என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.தாயின் வயிற்றில் கரு தோன்றிய சில வாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது.அதனால்தான் என்னவோ இன்றய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே ஆக்கப்பூர்வமான சில,பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகி விடுகிறது.




குழந்தை பிறந்ததும்:
கருப்பையின் இளம் சூட்டில் இருந்து வெளிபட்டு உடனேயே தாயின் வயிற்றில் சிசுவை கிடத்துகின்றனர்.கருவறையின் கதகதப்பு சில சதவிகிதங்களாவது சிசு பெறும் அல்லவா?தான் இருக்கும் கிளைமேட்டின் நிலைக்கேற்ப சிசு தன்னை தயார்படுத்திக்கொள்கிறது.வாயை அசைத்து பாலை குடிக்க கற்றுக்கொள்கிறது.இந்த நேரத்தில் தாயின் அரவணைப்பும்,கதகதப்பும் அவசியம் தேவை.குழந்தை முகத்தைப்பார்த்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது தாயின் கட்டாய வேலகளில் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும் பொழுது குழந்தையுடன் பேசலாம் என்றிராமல் இதற்கெனவே நேரத்தை ஒதுக்கிகொள்ளுங்கள்.




1மாதம்:
இப்பொழுது வண்ணங்களை ஆராயும் .கண்களை சுழற்றிப்பார்க்கும் தன்மை ஏற்படுகிறது.இப்பருவத்தில்தான் முளையின் வளர்ச்சி முறையாக ஆரம்பமாகி விடுகிறது.வண்ணமயமான ஆடைகள்,பொருட்கள்,விளையாட்டு சாமான்கள்,திரை சீலைகள் என்று குழந்தையின் சுற்றுபுற சூழ்நிலையை வண்ண மயமாக அமைத்துக்கொள்ளுங்கள்.மென்மையான ஒலி எழுப்பகூடிய கிளுகிளுப்பைகளை உபயோகியுங்கள்.




3மாதம்:
இந்த நேரத்தில் குப்புறப்படுப்பது,திட உணவு கொடுத்தல்,உட்காருதல் போன்றவை செயல் படுத்தும் காலம்.அறையில் சீரியல் பல்புகளை தொங்க விட்டு சற்று தூரத்தில் நின்று அதனை பார்க்க செய்யுங்கள்.இதனால குழந்தையின் அறிவுத்திறன் பெருகும்.




6 மாதம்:
விளையாடுதல்,நடத்தல்,புரிந்துகொள்ளுதல் போன்ற செயல்கள் இருக்கும்.இச்சமயத்தில் மென்மையான விளையாட்டுப்பொருட்களை கஞ்சத்தனம் பண்ணாமல் வாங்கிகொடுங்கள்.உடைக்க விடுங்கள்.கயிற்றினால இழுக்கக்கூடியவண்டிகள் ,பொம்மைகள் போன்றவை நலம் பயக்கும்.




1வருடம்:
பொருட்களை தூக்கி வீசவும்,கீழ்படியவும்,பேச ஆரம்பிக்கவும் கூடிய பருவம்.மழலைகள் நாம் சொலவதை விட செய்வதைத்தான் அதிகம் ஏற்றுக்கொள்ளும்.ஆகவே நல்ல விஷயங்கள்,பண்பாடுகள்,செயல்களை குழந்தையின் எதிரே செய்வதற்கு பழகுங்கள்.வெறுப்பையும்,எரிச்சலையும்,கோபத்தையும்,சண்டை சச்சரவுகளையும் குழந்தை முன் காட்டாதீர்கள்.நல்ல பழக்க வழக்கங்களைப்பார்க்கும் மழலை தன் ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும்.பிற்காலத்தில்; நல்ல பிரஜையாக உருவெடுக்கும்.




2 வருடம்:
இந்நேரத்தில் குழந்தை ஆராயும் மன நிலைக்கு வந்திருக்கும்.மூளையின் சக்தி மேம்படும் பருவம் இது.நிறைய வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.எதிரே வரும் ஒவ்வொரு சம்பவத்தினையும் விளக்கிக்காட்டவேண்டும்.மழலையில் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் சலிக்காமல் கருத்தான பதில் கூறி தெளிவை ஏற்படுத்த வேண்டும்.டிவியில் மியூஸிக் சானலை ஆன் செய்து "மை நேம் இஸ் சுப்பு லக்ஷமி" போன்ற பாடலை அலற விட்டு அது ஆடுவதை ரசிக்காமல் அறிவுப்பூர்வமாக நேஷனல் ஜியாகிரபிக்,டிஷ் கவரி சேனல் போன்றவற்றை காட்டி விலங்குகள்,பறவைகள் போன்றவற்றை போட்டுக்காட்டி விளக்கம் சொலலாம்.பகுப்பாயும் திறனை வளர்க்கவேண்டும்.குழந்தையையும் பெரிய மனிதராக பாவித்து முக்கியத்துவம் கொடுங்கள்.




3 வருடம்:
நன்றாக பேச கற்றுக்கொள்கிறார்கள் .மொழிவளர்ச்சி அதிகரிக்கூடிய வயது.குழந்தை மீது தாய் அதிகம் கவனிக்க கூடிய பருவம் இது.குழந்தையின் ஆட்டம்,சேட்டைகளால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் கண்களில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய சிக்கலான பருவம்.ஞாபகசக்தியை மேம்படுத்த நர்சரி ரைம்ஸ்,எழுத்துக்கள்,எண்கள் போன்றவற்றை பயிற்றுவிக்கவேண்டும்.அலுக்காமல் நல்ல கதைகள் கூறி கேள்வி கேட்டு பதில் கூறி தெளிவு படுத்த வேண்டும்.அவர்களையும் வினா எழுப்ப பழக்க வேண்டும்.வீர தீர கதைகள் கேட்கும் குழந்தைகள் தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களின் சரித்திரம் கேட்கும் மழலைகள் தானும் அவ்வாறே வரவேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்வார்கள்




4 வருடம்:
குழந்தையின் செயல்களை உன்னிப்பாக கவனியுங்கள்.நட்பு ஆரம்பமாகும் பருவம் இது.சேட்டைகள் தாங்காமல் அடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.அடி வாங்கும் குழந்தை ஆராயும் அறிவு குறைந்து விடும்.சுறுசுறுப்பும் குறைந்து விடலாம்.நயமான வார்த்தைகள் பேசி பழகுங்கள்.




5 வருடம்:
நல்ல பள்ளியாக ஒரு வழியாக சேத்து இருப்பீர்கள்.குழந்தைக்கு கல்வி மீது ஈர்ப்பும்,ஆர்வமும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியருக்கும் உள்ள கடமை.ஆகவே குழந்தை வகுப்பாசிரியர்களுடன் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்.அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக பேசுங்கள்.குழந்தையின் ஆர்வம்தான் அது அதி புத்திசாலியாக நிர்மாணிக்கும்.ஆகவே குழந்தையின் ஆர்வத்தை மேம்படுத்துங்கள்.




6 வருடத்திற்கு மேல்:
கூச்ச சுபாவம்,குறைந்த கற்கும் திறன்,சோம்பல் போன்ற குறைபாடுகள் இருக்கும் குழந்தைகள் இனம் கண்டு திருத்தபடவேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கடமை.பிறரிடம் எப்படி பழகுதல்,உறவினர்கள்,பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்தல்,எப்படி நடந்து கொள்ளுதல் போன்றவை அழகுற அறிந்து கொண்டு இருக்கக்கூடிய பருவம் இது.பிள்ளைகளின் அபார உடல்,மூளை வளர்சியை பெற்றோர் அறிய முடியும்.அறிவையும்,ஆற்றலையும்,உடல் பலத்தையும் எப்படி மேம்பட வைக்கவேண்டும் என்று நல்ல ,சத்துமிகு உணவுபழக்கவழக்கங்களாலும்,அரவணைப்பான பேச்சுகளாலும்,வாஞ்சையான அறிவுரைகளாலும்,தோழமை உணர்வு மிக்க நெருக்கத்தாலும் பிள்ளைகளை பண்பட வைக்கவேண்டிய கால கட்டமிது.




8 வயதுக்கு மேல்:
விளையாடும் ஆர்வம் அதிகமிருக்கும் பருவம் இது.படிப்பு மட்டுமல்லாமல் மற்ற நல்ல விஷயங்களிலும் ஈடுபட வையுங்கள்.பெற்றோர்கள் நல்லதொரு வழிகாட்டியாக ரோல்மாடலாக இருங்கள்.பெரியவ்ர்கள்,உறவினர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.கூட்டுக்குடும்பம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அமர்ந்து அளவளாவும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள்.வெறுமனே ஹாய்..ஊய்..என்றிராமல் பொறுப்புடன் நடந்துகொள்ளும் பண்பை வளருங்கள்.




10 வயதுக்கு மேல்:
குழந்தை படிக்கும் முறை,அறை,நேரம்,நட்பு,அவர்களின் பொழுது போக்கு,செயல் முறை,உணவுபழக்கவழக்கங்கள்,பணப்புழக்கம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது.நீங்கள் அம்மா,அப்பா என்பதுடன் நல்ல நண்பன் முறையிலும் குழந்தைகளை அணுகுங்கள்.


பதின் பருவம்:
இப்பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு அதி முக்கியம் கொடுங்கள்.நட்பு என்ற சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.அதிலும் ஒரு அளவை நிர்மாணிக்க கற்றுக்கொடுங்கள்.பிள்ளையின் ஆர்வமும்,நோக்கமும் எந்த துறையின் மீது உள்ளதோ அதனை மேலும் விரிவு படுத்த உதவுங்கள்.உதாரணமாக் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிடத்தயங்காதீர்கள்.வலுகட்டாயமாக உங்கள் விருப்பங்களை புகுத்தும் பொழுதுதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.இக்கால கட்டத்தில் ஜங்ஃபுட் போனன்றவற்றில் அதீத ஆர்வம் காட்டுவர்.அவைகளை குறைத்து நல்ல சத்துமிக்க ஆகாரங்களை,காய் பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வையுங்கள்.சுயமாக நல்ல முடிவெடுக்கும் திறனை ஊக்குவியுங்கள்
அறிவுப்பூர்வமான .ஆக்கமிகு விஷயங்களை அறியச்செய்வது,ஊக்குவித்தல்,அமைதியான சூழல் ஏற்படுத்திக்கொடுத்தல்.நல்ல பண்பாடு,நல்ல சிந்தனைகள்,நல்ல நட்புகள் போன்றவை சுற்றி இருக்குமாயின் பிள்ளைகளின் தன்னம்பிக்கை வலுப்பட்டு,நல்ல ,அறிவான சந்ததியினராக உருவெடுப்பார்கள்.சகாப்தத்தை படைப்பார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களாக ஜொலிப்பார்கள்.சாதனையாளர்களாக சாகப்தம் படைப்பார்கள்.

நம் அனைவரது சந்ததிகளுக்கும் அந்த பேறு கிடைத்திட வேண்டும்.

அறிவான சந்ததிகள் 




எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.இது முழுக்க முழுக்க உண்மை.பாடலின் வரிகளை மேலோட்டமாக பார்த்தால் அபத்தமாகத்தான் தெரியும்.ஒரு தாய்க்கு தன் பிள்ளை கெட்டவன்(ள்)ஆவதற்கு பிடிக்குமா?நல்லவனாவதற்காகத்தானே பாடு படுவாள்.அதையே குறிகோளாக கொண்டுதானே வளர்ப்பாள்.அதற்காகத்தானே பிராயசித்தப்படுவாள்?இப்படித்தான் தோன்றும்.ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தோமானால் உண்மை புலப்படும்.

நம் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளுக்கும் பெற்றோர்கள் தம்மை தொடர்பு படுத்தி சிந்தித்து பாருங்கள்.உண்மை புரிபடும்.உதாரணமாக ஒரு இல்லத்தரசி ஒரு நூறே ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குகிறாள்.கணவருக்கு தெரிந்தால் 'தேவையா'என்று கடிந்து கொள்ளுவார் என்று அவள் கணவரிடம் மறைத்து விடுகிறாள்.இது சாதாரண விஷயமாயினும் இதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையும் நாளைக்கு அந்த 'மறைத்தல்' என்ற விஷயத்தை பின் பற்றும்.சின்ன தவறுகளை செய்து விட்டு பெற்றோர் திட்டுவார்களே என்று மறைக்க ஆரம்பிக்கும்.இதுவே வளர்ந்து பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஸ்நேகிதர்களுடன் ஊர் சுற்றி பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்களே என்று தப்புக்கு மேல் தப்பு செய்தால் நம்மால் ஜீரணிக்க இயலுமா?

குழந்தை வயிற்றில் ஜனனம் ஆனதுமே பெற்றோர்களுக்கு கடமையும் பொறுப்புணர்வும் ஆரம்பித்து விடுகிறது.பெண்ணின் வயிற்றில் கரு தோன்றி விட்டது என்று உறுதி ஆனதுமே தாய் நல்ல மனநிலையிலும்,அமைதியான குடும்ப சூழ்நிலையிலும் உயரிய எண்ணங்களுடனும் ,பொய்,பொறாமை,காழ்ப்புணர்வு,வெறுப்பு,கோபம்,எரிச்சல்,சச்சரவு,அகம்பாவம்,ஆணவம் போன்றவற்றை விட்டொழித்து மனதினை நேரிய வழியில் வைத்துக்கொள்ள வேண்டும்.இதைத்தான் இன்றைய மருத்துவ உலகம் கூறுகிறது.

தனிமையில் இருக்கும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளது கர்ப்பகாலத்தில் இதற்கெனவே நேரம் ஒதுக்கி அறையை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார்.மற்றொருவரோ தன் மதம் சார்ந்த உரையாடல்களை செல்போன் மூலம் ஒலிக்க விட்டு வயிற்றின் மேல் வைத்துக்கொள்வார்.

இறைவனின் படைபில் மனிதப்படைப்பு என்பது உன்னதமானது.மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு தனியான அந்தஸ்தையும்,சிறப்பையும்,பாக்கியத்தையும் இறைவன் கொடுத்துள்ளான்.ஒருவனின் திறமை,ஆளுமை அவனது புத்திக்கூர்மையை வைத்துத்தான் கணிக்கிறோம் அவன் வல்லவனா என்று.மனிதனின் புத்திகூர்மை,நினைவாற்றல்,விசாலமாக சிந்திக்கும் திறன்,செய்யும் ஒவ்வொன்றையும் பகுத்து,அலசி,ஆராய்ந்து,திட்டமிட்டு,ஆலோசனை செய்து செயலாக்கம் செய்தால் அவன் அறிஞனாக வெளிப்படுகின்றான்.

மனித மூளையின் அளவும்,திறனும் கரு உருவான உடனே ஆரம்பமாகி விடுகிறது.ஆரம்பத்தில்தான் அதன் அபரிதமான வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான,எல்லா விஷயங்களையும் கற்று பலதரப்பட்ட விஷயங்களையும் அறிந்து,புகட்டி,நல்லவற்றை ஏற்று,தீயவற்றை அகற்றி,கசடுகளை களை எடுத்து எண்ணங்களில் அசாத்திய தன்னம்பிக்கையும்,வரைமுறைக்குட்பட்ட தைரியத்தையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தோமானால் நன் மக்களை அறுவடை செய்யலாம்.நல்ல சமுதாயமும் உண்டாகும்.

தன்னம்பிக்கை,ஆற்றல்,கம்பீரம்,சுயமாக தீர முடிவெடுத்தல்,விடா முயற்சி,அறிவு,நல்லொழுக்கம்,கல்வி போன்றவற்றில் உயர்ந்து,சிறந்து நம் சந்ததிகள் விளங்குமாயின் அது நமக்கும்,சமுதாயத்திற்கும் கிடைக்கும் பெரும் பேறல்லவா?

மற்றொரு பதிவில் குழந்தைவயிற்றில் ஜனித்ததில் இருந்து அதன் பதின் பருவம் வரை நாம் நம் சந்ததியருக்கு ஆற்றக்கூடிய கடமைகளையும்,பொறுப்புகளையும்,கட்டாயங்களையும் பார்ப்போம்.

இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்கவும்,.


குழந்தைகளின் டாம்பீகம்.


இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன் சம்பாத்தியத்தில் இருந்து ஐந்தில் ஒரு பங்கைபிள்ளைகளின் படிப்புக்காக செலவு செய்கின்றான் என்றால் அது மிகைஆகாது.மெட்ரிகுலேஷன்,செண்ட்ரல் போர்ட்,காண்வெண்ட் இண்டர்நேஷனல் பள்ளிஎன்று எங்கோ போய் மனிதனின் சேமிப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டுஇருக்கின்றது.எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டிலேயே வருடத்திற்கு பத்துலட்சம் செலவுஆகும் பள்ளிகள் கூட(விடுதிவசதியுடன் அல்ல)உள்ளது.

கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளின் படிப்பை நல்லதொரு,பெருமையாகசொல்லிக்கொள்ளும் படியான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ,மிகமிககஷ்டப்பட்டு சேர்த்து விட்டு (சேர்த்தபொழுது அவர்கள் அனுபவத்தை கதையாகஎழுதலாம்)'அப்பாடா..இனிமேல் பிள்ளையைப்பற்றிய கவலையே இல்லை'என்றுநிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.


ஓரளவு செல்லமாக் வளர்க்கப்பட்ட பிஞ்சுகள் தம் வயதைசேர்ந்த சகமாணாக்கர்களுடன் பழகும்,ஸ்நேகிதம் கொள்ளும் தருணமும்ஏற்படுகின்றது.பிள்ளைகளுக்கு பெற்றோர் கஷ்ட நஷ்டங்களை தெரியாமல் சொகுசாகவளர்த்து படிப்புக்காக ஆயிரக்கணக்கிலும்,லட்சக்கணக்கிலும் செலவு செய்யும்பொழுது குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பும் ,அருமையும் தெரிவதில்லை.நமக்காகநம் பெற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற எண்ணம் முளைவிட்டுவிடுகின்றது.

இதனால் ஆடம்பரத்தையும்,ஏகோபோகத்தினையும்.உச்சகட்ட நாகரீகத்தையும் மிகசுலபமாக கற்றுக்கொண்டு அதுவே வாழ்க்கையில் இயல்பாகி போய்விடுகின்றது.இதுதான் சதம் என்று தீர்மானமும் பிஞ்சுகளின் எண்ணத்தில்விதைக்கப்பட்டுவிடுகின்றது.

கூட படிக்கும் மாணவன் ஆடி காரில் வரும் பொழுது மாருதி 800 வரும் மாணவனுக்குஒரு இன்பியாரிட்டி காம்ப்ளக்ஸ்.ஸ்கூட்டியில் வரும் மாண்விக்கு ஆல்டோவில்வரும் மாணவியைக்கண்டால் ஏக்கம்.இப்படி பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கப்பட்டுவிடுகின்றது.

"மம்மி ,டேடியை சின்ன வண்டியில் போக சொல்லிட்டு ஸ்கூலுக்கு பெரிய வண்டிஅனுப்புங்கள்."
"என் பிரண்ட் இந்த சம்மர் வெகேஷனுக்கு ஹாங்காங் போறான் நாம் எங்கேபோகலாம்?"
"எப்ப பார்த்தாலும் இட்லி,சட்னியா?சுனில் பர்கர்,பிஸ்ஸா,பாஸ்தா தான் கொண்டுவர்ரான்"
"எல்லாபசங்களும் காரில் வர்ராங்க.நாமும் ஒரு கார் வாங்குவோம்.அப்பா கிட்டேசொல்லு"
ஸ்வேதா பாக்கட் மணியாக ஹண்ட்ரட் ருபீஸ் கொண்டு வர்ரா,எனக்கு நீ பத்து ரூபாய்தர்ரது அசிங்கமா இருக்கு"
"நாளைக்கு ஆதிலுக்கு காபூலில் பர்த் டே பார்ட்டி.நீயெல்லாம் என் பர்த் டேயை அப்படிசெலிபரேட் பண்ண விட்டு இருக்கியா"
"என் பிரண்டோட அப்பா வீக் எண்ட்டில் அவர் மெம்பராக இருக்கும் கிளப்புக்குடின்னருக்கு அழைத்துட்டு போவார்.நம்ம டாடியையும் ஒரு கிளப் மெம்பராகசொல்லுங்கள்"
இப்படி வசனங்கள் எல்லாம் பல வீடுகளில் சர்வசாதாரணமாகஒலிக்கும்.அந்தஸ்த்தில் கூட படிக்கும் பிள்ளைகளுக்கு சமமாக இருக்க வேண்டும்என்ற உணர்வும் கல்வியுடன் சேர்ந்தே வளர்ந்து விடுகின்றது.
விளைவு..

ஆறாவது படிக்கும் சிறுவனுக்கு செல்போன்,எட்டாவது படிக்கும்பொழுது லேப்டாப்,பத்தாவது படிக்கும் பொழுது டூ வீலர்,பிளஸ் டூ போகும் பொழுது போர்வீலரில் சுயடிரைவிங்,பெரிய ரெஸ்டாரெண்ட்களில் பஃபே,மால்களில் சுற்றல் .காலேஜ் செல்லும்முன்னர் பப்,கிளப் இப்படி டாம்பீகமாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.இந்த ஆசைகள்நியாமானதுதானா?நல்ல வழியில் கொண்டு செல்லுமா?பெற்றோர்களுக்குகட்டுப்படியாகுமா?நம் குடும்பபொருளாதாரத்திற்கு தகுமா?என்றுஎண்ணுவதில்லை.இது தவறான வழிக்கு கொண்டு செல்வதற்கு காரணியாகிவிடுகின்றது.அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரக்கதைதான்.

பிள்ளைகளின் ஆணவ்ம்,டாம்பீகம் இவற்றை தடுத்து நிறுத்தும் செங்கோல்பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.அது நமது காட்டாயக்கடமையும் கூட.

.ஆரம்பத்திலேயே பைசாவின் அருமையையும் உணர்த்துங்கள்.ஒவ்வொருபைசாவயும் ஈட்டுவதற்கு உள்ளாகும் கஷ்ட்டத்தையும் தெளிவு படுத்துங்கள்.பணவிஷ்யத்தில் கறார் ஆக இருங்கள்.

செல்ல பிள்ளை விரும்புகின்றானே என்று ஆசைப்பட்டதை எல்லாம் உடனேவாங்கிக்கொடுத்து விடாதீர்கள்.தேவையானதா?இல்லையா?என்று பிள்ளகளைவிட்டே தீர்மானம் செய்யச்சொல்லுங்கள்.அத்தியாவசியமான பொருட்களைக்கூடஉடனே வாங்கிக்கொடுக்காதீர்கள்.

ஆரம்பத்திலேயே சிக்கனம்,கறார்,கண்டிப்பைக் காட்டினோமானால்குழந்தைகளுக்கு அதிகபடியான ஆசைகளும்,டாம்பீக எண்ணங்களும்,பணத்தின்அருமையை புரியாமல் இருப்பதும்,படாடோப நோக்கமும் உண்டாவது தானகவேவள்ர்வதை தடுக்கும்.

." உன் ஸ்நேகிதன் வீட்டில் என்ன கார் உள்ளது?எத்தனைக்கார் உள்ளது?டூ வீலர்மட்டும்தான் உள்ளதா?அவங்க வீட்டில் ஹாலில் ஏஸி பண்ணிஇருக்கிறார்களா?அந்தப்பையன் பஸ்சிலா வருகின்றான்?அவனுக்கு பர்த்டே paarttஉண்டாஅவள்வீடு தனிவீடா?பிளாட்டா?சொந்தவீடா?வாடகைவீடா?"இப்படிக்கேள்விகளை கண்டிப்பாகதவிர்த்து விடுங்கள்.

.அவன் எப்படிப்படிப்பான்?எந்த சப்ஜக்ட்டில் நல்ல மார்க் வாங்குவான்?கிளாசில் யார்பர்ஸ்ட்?அனுவல் டேயில் அவனது டிராமா எப்படி?இவளது டான்ஸ் எப்படி?சம் யார்நன்றாக போடுவார்கள்?டிராயிங் யார் சூப்பராக போடுவார்கள்ரீதியில் மட்டுமேகேள்விகள் எழுப்ப கற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்நேகிதர்களுக்கு தன்னைஅந்தஸ்த்திலும்,ஆடம்பரத்திலும் சமமாககாட்டிக்கொள்ளும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.

வாழ்க்கையின் மேடு பள்ளங்களின் எதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள்.அந்தஸ்துபேதமற்ற நட்பை உள்ளத்தில் விதையுங்கள்.

.எல்லாவித சந்தோஷங்களையும் ஒருமித்தே அனுபவிக்கவேண்டும் என்றஅவாவின் விபரீதத்தை செவ்வன் சொல்லிக்காட்டுங்கள்.

.நம்மை விட வசதி குறைந்த சக மாணவமாணவிகளுடனும் ஒரே மாதிரி பழகவேண்டும் என்ற எதார்த்ததை எடுத்து இயம்புங்கள்.

இவை எல்லா வற்றுக்கும் மேலாக இறை பயத்தை,அச்சத்தைபயிற்றுவியுங்கள்இறை பயம் தவறான வழிகேட்டில் இருந்து தவிர்த்து விடும்.இறைஅச்சத்துடன் கூடிய உலககல்விதான் நல்ல பிள்ளைகளாக,நேர்வழியில் செல்லும்குழந்தையாக,பிள்ளைகளின் பதின் பருவத்தில் பெற்றோர்களுக்கு தொந்தரவுகொடுக்காத குழந்தைகளாக ,சமூகம் மெச்சும்பிள்ளைகளாக,உதாரணப்பிள்ளைகளாக,சுற்றமும்,நட்பும்கொண்டாடடப்படும்பிள்ளைகளாக ,மொத்தத்தில் நல்ல பிரஜையாக உருவெடுப்பார்கள் என்பதில்ஐயமில்லை

No comments:

Post a Comment