அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, February 19, 2011

அதிமுக-தேமுதிக


அதிமுக-தேமுதிக ஒருங்கிணைய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் 'மறைமுக' கருத்து


திருப்பூர்: திமுகவை வெல்வதற்கு எம்ஜிஆர் சக்திகள் (அதிமுக-தேமுதிக) ஒருங்கிணைய வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

நீதிமன்ற உத்தரவால் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் திருப்பூரில் 4.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவுடன் உடனடி தீர்வு குறித்து திமுக அரசு யோசித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

அதேபோல மீனவர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை என தமிழகத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை. தேர்ந்தெடுக்கக் கூடாதவர்களை நாட்டு மக்கள் தேர்வு செய்ததே இதற்குக் காரணம்.

காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று ஊழல் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை மேலும் ஆட்சியில் அமர்த்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்.

எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமர முடியவில்லை. அதேநிலை மீண்டும் ஏற்பட, எம்ஜிஆர் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். அதற்கு, எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியும், எம்ஜிஆரின் உண்மை விசுவாசியின் (விஜயகாந்த்தை சொல்கிறார்) கட்சியும் ஒருங்கிணைய வேண்டும் என்றார்.

கணவரைக் காதலியுங்கள்


கணவரைக் காதலியுங்கள்... அதுதான் நிரந்தர சந்தோஷம்! - திருமதி ஒபாமா

Michelle with Obama

Up (120)
Down (21)


நியூயார்க்: சந்தோஷம் நிரந்தரமாக இருக்க ஒவ்வொரு பெண்ணும் தமது கணவரைக் காதலிக்க வேண்டும். அன்பு, மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்வதில் முன்னுரிமை தரவேண்டும். அப்போதுதான் சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும், என்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவம் குறித்தும், காதலர் தினத்துக்காக அவர் சொல்ல விரும்பும் கருத்து குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் மிகச் சிறப்பாக, பெண்களுக்கு பாடம் சொல்லும் அளவுக்கு அமைந்திருந்தது.

திருமதி ஒபாமா கூறியது: 

தங்களின் வாழ்க்கை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைய தம்பதிகள் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ வேண்டும். பெண்கள் தங்கள் கணவர்களைக் காதலிக்க வேண்டும். அன்பையும் சந்ததோஷத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கணவன்- மனைவி இருவரும் தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் சிரிப்புடன் பகிர்ந்து கொள்வது முக்கியம். சிரிப்பில்லா இடத்தில் மகிழ்ச்சி இருக்காது.

எங்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்தின் போது அரசியலில் புகழ்பெற வேண்டும் என லட்சியத்துடன் அவர் (ஒபாமா) இருந்தார். முதலில் இல்லியாயிஸ் செனட் உறுப்பினரானார். பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினர் ஆனார். தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்த பதவியில் உள்ளார்.

இந்த அளவு அவர் உயர்ந்த நிலை அடைவதற்கு எங்களின் மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பும் புரிந்து கொள்ளலும், எப்போதும் குறையாத காதலும்தான் காரணம் என நினைக்கிறேன். எங்களுக்கு இடையே எப்போதும் கோபப்படுவதற்கான சூழ் நிலை இருந்ததில்லை. மாறாக சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சியான தருணமே இருந்து வருகிறது.

அதுதான் எங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. எனவே, நாங்கள் எப்போதும் கேலி, கிண்டலுடன் கூடிய மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி கொள்கிறோம்..." என்றார்கணவரைக் காதலியுங்கள்

அறிவியல்


சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்த விமானம்PDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…

on 10-07-2010 09:03
Favoured : 5
Image"சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது. சூரியத் தூண்டல் சூரிய ஆற்றல்-விமானம்."தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆப்பிள் ஐ-போன் 4 - விரிவான அறிமுகம்PDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…

Favoured : 9
தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு அதன் ரசிகர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்கு காரணம், அந்த நிறுவனம் தரும் ஒவ்வொரு தயாரிப்பையும் பல புதுமைகளுடனும், புதிய,புதிய தொழில்நுட்பங்களுடனும் வெளியிடுவதுதான்.  ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாமும் விலை அதிகமாக இருந்தாலும், அதன் வடிவமைப்பும், உள்ளே புகுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்ப வசதிகளும் அதை வாங்குவோருக்கு விலை ஒரு பொருட்டல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும்.
Image

அறிவியல்


அறிவியல்

இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழில் படம் தயாரிப்பு : கங்கை அமரன் உடந்


இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழில் படம் தயாரிப்பு : கங்கை அமரன் உடந்தைPDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…

on 20-02-2011 10:08  
Favoured : None
இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழில் படம் தயாரிப்பு : கங்கை அமரன் உடந்தை. தமிழில் படம்! ராஜபக்‌ஷேவுடன் இசையமைப்பாளர் கூட்டு சதி! இலங்கையில் போர் நடக்கும்போது திரையுலகம் திரண்டு பல போராட்டங்களை நடத்தினார்கள். அதில் சொல்லப்பட்டதும் நாம் புரிந்து கொண்டதும் ஒரே விசயம்தான். இந்த அழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமானவர்கள் ஒரு புறம் இருக்க, இந்த கொடுமையான பதிவுகளை காலத்துக்கு எடுத்துச் சொல்லவும் அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டும் பொறுப்பும் திரைத்துறையினருக்கும் கலைத்துறையினருக்கும் அதிகம் உண்டு என்பதே.Image
இலங்கைப் பிரச்சனை அரசியலாக்கப்படுவது ஒருபுறம் இருக்க இந்தக் கொடுமைகளை எல்லாம் மறைக்க ராஜபக்‌ஷே ஒரு பெரிய சதி திட்டம் தீட்டி வருகிறார். அதாவது தமிழில் படம் தயாரிக்க இருக்கிறார் ராஜபக்‌ஷே. இதனால் அவருக்கு என்ன லாபம்... அதில் தானே விசயமே இருக்கிறது. தமிழில் படம் எடுத்து அதில் வரும் காட்சிகளில் இலங்கையில் உள்ள தமிழர்கள் நன்றாக இருப்பது போலவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது போலவும் கொடுமைக்கு காரணமானவர்கள் நல்ல மனிதர்களைப் போலவும் காண்பிக்க வேண்டும் என்பது ராஜபக்‌ஷேவின் கனவு. 

இதில் கொடுமை என்னவென்றால், இதற்கு ஒத்துழைப்பதாக ராஜபக்‌ஷேவிடம் வாக்கு கொடுத்திருகிறாராம் ஒரு பிரபல தமிழ் இசையமைப்பாளர். அவர் வேறு யாரும் இல்லை, கங்கை அமரன்தான். இதற்காக எவ்வளவு கோடிகளை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம் ராஜபக்‌ஷே. சமீபமாக ரகசியமாக இலங்கை சென்று ராஜபக்‌ஷேவிடம் பேசிவிட்டு வந்திருக்கிறாராம் இந்த இசையமைப்பாளர். கொழும்பில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இந்த இசையமைப்பாளரை ராஜமரியாதையுடன் தூதர்கள் அரச மாளிகைக்கு அழைத்து சென்றார்களாம். இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த இளையமைப்பாளரின் மகன் தற்போது பிசியான பிரபல டைரக்டர் என்பதால் அவரை வைத்தே அந்தப் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் சதிகாரர்கள். (அப்போ... வெங்கட் பிரபுவிற்கு இனிமேல்தான் மங்காத்தா ஆரம்பம்ன்னு சொல்லுங்க!)

இந்தியா அதிரடி தொடக்கம் : உலக கோப்பை போட்டிகளின் முதல் அரைச்சதம் பெற்றார் ஷேவாக்


இந்தியா அதிரடி தொடக்கம் : உலக கோப்பை போட்டிகளின் முதல் அரைச்சதம் பெற்றார் ஷேவாக்!

AddThis Social Bookmark Button
உலககோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று பங்களாதேஷ் மிர்புர் மைதானத்தில் ஆரம்பமாகியது.
டாஸ்வென்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இந்தியாவின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷேவாக் - சச்சின் ஜோடி அதிரடி ஆரம்பத்தை தொடங்கியது. 10.5 ஓவர்களில் 69 ரன்கள் பெற்றிருந்த போது சச்சின் டெண்டுல்கர் ரன் - அவுட்டில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இம்முறை உலக கிண்ண போட்டிகளில் முதலில் ஆட்டமிழந்த வீரராக சச்சின் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து கம்பீர் ஷேவாக்குடன் இணைந்தார். ஷேவாக் தனது முதல் போட்டியிலேயே அரைச்சதம் அடித்தார். இதன் மூலம் உலக கிண்ண போட்டிகளில் முதல் அரைச்சதமடித்த வீரர் என்ற பெருமையை ஷேவாக் பெற்றுள்ளார்.

இந்திய அணி முதல் 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்திருந்தது.

ரகுவரன் பற்றிய அறியப்படாத ரகசியம்!


ரகுவரன் பற்றிய அறியப்படாத ரகசியம்!

AddThis Social Bookmark Button
உயிரோடு இருக்கும் வரை பல பிரபலங்கள் தங்களின் இன்னோரு பக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் சிலர் அதை எப்படியாவது ஃபோக்கஸ் செய்தி எக்ஸ்ட்ரா விளம்பரம் தேடிக்கொள்வார்கள்.
சியான் விக்ரம் ஒரு திறமையான போட்டோ கிராபர் என்பது தெரிந்த விஷயம். சூரியா ஒரு திறமையான ஃபேஷன் டிசைனர் என்பது வெளிச்சத்துக்கு வந்ததுதான். அதேபோல மூத்த நடிகர்களில் ராஜேஷ் ஒரு நாண்-பிக்‌ஷன் ரைட்டர் என்பதும் பிரபலம்.
ஆனால் மறைந்த திரைக்கலைஞர் ரகுவரன் ஒரு அற்புதமான மியூசிக் கம்போஸர் என்பது வெளியே தெரியாத செய்தி.  மிகுந்த இசைஞானம் உள்ள ரகுவரன் தமிழில் மியூசிக்கல் ஆல்பம் ஒன்று கொண்டுவரவேண்டும் என விரும்பியவர்.
நல்ல கீ போர்டு பிளேயரான ரகுவரன், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ட்யூன்கள் போட்டுக்கொண்டே இருப்பராம் இப்படி நூற்றுக்கும் அதிகமான  மெட்டுக்களை அவரது கீ போர்டில் சேமித்து வைத்திருக்கிறாராம்.
ரகுவரன் இசையமைத்த பாடல்களில் தேர்ந்தெடுத்த மெட்டுகளை அவரது நினைவு ஆல்பம் வெளிக்கொண்டுவர திட்டமிட்டுள்ளார் அவரது மனைவி ரோகிணி.

அனன்யாவுக்கு சீடன் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

செல்வராகவன் கதைக்கு கமல் ஓகே சொன்னதன் இரகசியம்

டிவி சீரியலில் இறங்கும் கௌதம் மேனன்!

களமிறங்குகிறார் கமலின் இளையமகள்!

மங்காத்தா யூனிட் மும்பை சென்றதுக்கு இன்னொரு காரணம்

கமல் ரஜினி ஒரே படத்தில் இணைவார்களா?

நடிகையர் திலகம் சாவித்திரி உட்பட இந்தியக் சினிமா கதாநாயகிகள் அறுவருக்கு சிறப்புத் தபால்தலை!

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்!