அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, February 19, 2011

மீனவர் பிரச்சனை தொடர்பில் அச்சுறுத்த முயலும் இந்தியா - ஜே.வி.பி


மீனவர் பிரச்சனை தொடர்பில் அச்சுறுத்த முயலும் இந்தியா - ஜே.வி.பி


மீனவர் பிரச்சனையை காரணமாக வைத்து இலங்கையை இந்தியா அச்சுறுத்துவதற்கோ அல்லது
இறையான்மைக்கு பங்கம் விளைவுக்குமாறு செயற்பட முயல்வதற்கு கூடாது என இலங்கையின் ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.அவ்வாறு செய்வதற்கு இந்தியாவிற்கு எந்த அருகதையும் இல்லை அதை அனுமதிக்கவும் கூடாதென ஜே.வி.பி யின் பிரசார் செயலாளர் விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் மேலும் தமிழகத்தின் தி.மு.க கட்சியானது தேர்தல் இலாபத்திற்காக அப்பாவி மீனவர்களை பலிக்கடாவாக்கியுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அனுப்பி பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது.

இந்த கீழ்த்தரமான செயற்பாடுகளை உடனடியாக கைவிடுமாறு தி.மு.க தலைவர்களை எச்சரிப்பதுடன் இந்தியாவையும் இலங்கையையும் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 

No comments:

Post a Comment