இந்தியா அதிரடி தொடக்கம் : உலக கோப்பை போட்டிகளின் முதல் அரைச்சதம் பெற்றார் ஷேவாக்!
உலககோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று பங்களாதேஷ் மிர்புர் மைதானத்தில் ஆரம்பமாகியது.
டாஸ்வென்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இந்தியாவின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷேவாக் - சச்சின் ஜோடி அதிரடி ஆரம்பத்தை தொடங்கியது. 10.5 ஓவர்களில் 69 ரன்கள் பெற்றிருந்த போது சச்சின் டெண்டுல்கர் ரன் - அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இம்முறை உலக கிண்ண போட்டிகளில் முதலில் ஆட்டமிழந்த வீரராக சச்சின் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து கம்பீர் ஷேவாக்குடன் இணைந்தார். ஷேவாக் தனது முதல் போட்டியிலேயே அரைச்சதம் அடித்தார். இதன் மூலம் உலக கிண்ண போட்டிகளில் முதல் அரைச்சதமடித்த வீரர் என்ற பெருமையை ஷேவாக் பெற்றுள்ளார்.
இந்திய அணி முதல் 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்திருந்தது.
இதன் மூலம் இம்முறை உலக கிண்ண போட்டிகளில் முதலில் ஆட்டமிழந்த வீரராக சச்சின் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து கம்பீர் ஷேவாக்குடன் இணைந்தார். ஷேவாக் தனது முதல் போட்டியிலேயே அரைச்சதம் அடித்தார். இதன் மூலம் உலக கிண்ண போட்டிகளில் முதல் அரைச்சதமடித்த வீரர் என்ற பெருமையை ஷேவாக் பெற்றுள்ளார்.
இந்திய அணி முதல் 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்திருந்தது.
No comments:
Post a Comment