அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Wednesday, March 2, 2011

கட்சியைக் கலைக்குமாறு சீமானுக்கு அச்சுறுத்தல்


கட்சியைக் கலைக்குமாறு சீமானுக்கு அச்சுறுத்தல்!

AddThis Social Bookmark Button
கட்சியைக் கலைக்கவும் இல்லயேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு
புதுச்சேரியிலிருந்து  அச்சுறுத்தல்  கடிதம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் கடிதம் புதுச்சேரியில் இருந்து வந்திருப்பதாகவும், அன்மையில் அப்பகுதியில் நாம் தமிழர் அமைப்புச் செயற்பாட்டாளர்களைக் கொலை செய்தவர்களாலேயே இந்த அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும்,நாம் தமிழர் அமைப்பின் நிரிவாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகத் தாம் கருதுவதாகவும், அதனால்  இன்று காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்திருப்பதாகவும், தங்கள் கோரிக்கையை ஏற்று, சீமானுக்கு உரிய பாதுக்காப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டிருப்பதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

வைரமுத்துவுக்கு பாட்டு எழுத வராது, மனைவிதான் எழுதி தருகிறார்


வைரமுத்துவுக்கு பாட்டு எழுத வராது, மனைவிதான் எழுதி தருகிறார் - கவிஞருக்குப் பெருமையே!

AddThis Social Bookmark Button
வைரமுத்துவுக்கு பாட்டு எழுத வராது, மனைவிதான்  எழுதி தருகிறார் என்பதைக் கேட்டுப் பெருமையுற்றேன் என்றார் கவிஞர்
கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா மதுரையில்நடைபெற்றது.
இதில் ஏற்புரை ஏற்றுக் கவிஞர் வைரமுத்து பேசியபோது; " திரைப்படத்துறைக்குள் நுழைந்த எனக்கு எத்தனையோ அவமானங்கள், சிராய்ப்புகள், காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் நான் இன்றைக்கு தமிழக மக்களின் மனதில் நிற்கிறேன்.
விமரிசனங்களை எல்லாம் புறக்கணித்ததால் மட்டுமே திரைப்படத்துறையில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. திரைத்துறைக்குள் நான் நுழைந்த கால கட்டத்தில் என்னால் பாட்டுகளை எழுதவே முடியாது. எனக்கு என் மனைவி தான் எழுதி தருகிறாள். வைரமுத்து அதை கொண்டு சென்று விற்று வருவதாக கூட பேசினார்கள். இதையெல்லாம் நான் கேட்ட போது, எனது மனைவிக்கும் எனக்கு இணையான கவுரவத்தை அளித்ததாக மகிழ்ச்சி தான் இருந்தது. இப்படி பேசியவர்கள் மீது எனக்கு கோபமில்லை.
இது போல் நான் பாடல்கள் எழுதினால் அந்த படமே ஓடாது என்று கூட சொன்னார்கள். ஒரு கட்டத்தில் மெட்டுக்களை சொன்னால் சொன்னால் அதே இடத்தில் பாடல்களை எழுதி கொடுத்து வந்தேன். அந்த அளவுக்கு என்னை நிலைநிறுத்தி கொள்ள திரைத்துறையில் நான் உழைக்க வேண்டி இருந்தது. இது போல் ஒரு கவிஞராக,  பல அவமான சம்பவங்கள் எனக்கு நேர்ந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி என்னை நான் இன்றைக்கு அடையாளப்படுத்திக் கொண்டு இந்த உயரத்தை எட்டியிருக்கிறேன். அவமானங்களை கண்டு துவண்டு விடக்கூடாது.
என் பாட்டுக்கள் விவகாரத்து செய்ய இருந்தவர்களை ஒன்று சேர்த்துள்ளன. தற்கொலைக்கு போனவர்களை தடுத்து நிறுத்தியுள்ளன. வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் சோர்ந்து போனவர்களை தேற்றி புதிய வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையை ஊட்டியுள்ளன. இப்படி நம்பிக்கையை தருவதாக எனது பாடல்கள் இருந்தது எனக்கு கிடைத்த மற்ற எல்லா பாராட்டுகளையும் விட மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. இதையே எனக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதுகிறேன்.
கவிஞர்கள் கற்பனையாலும், நிகழ்காலத்தோடு ஒன்றி போவதாலும் தலைமுறைகளை தாண்டி நினைவில் நிற்கும் அளவுக்கு கூட பாடல்களை எழுத முடியும். அதற்கு தங்களுக்கென்று பாடல்களை எழுதுவதில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

அம்மா தாயே... 41 சீட்டாவது பிச்சை போடுங்கம்மா

அம்மா தாயே... 41 சீட்டாவது பிச்சை போடுங்கம்மா.......

http://www.seithy.com/admin/upload/kanimoli-karunanidhi-250_07042008.jpg 
1. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : ராசாவுடனான விசாரணையில், அதிகாரிகள் முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிப்பது, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை அவர் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என்பதைத் தான். ராஜா எதுவுமே சொல்லவில்லை என்றாலும், சி.பி.ஐ., கைக்கு எல்லாமே கிடைக்கும். என்னைப் போன்ற பலரும் இதற்காக, இரவு, பகல் பாராமல் உலகம் முழுக்க சுற்றிச் சுற்றி வேலை பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது, ராஜாவுக்கும், அவர் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் தெரியும்.


அது சரி.. கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறது  ஒரு கூட்டம்.. நீங்க ஒத்த ஆளு மொத்த பணத்தையும் அமுக்கலாம்னு பார்க்கறீங்களா?அப்புறம் மத்த கூட்டுக்களவாணிகளுக்கு பங்கு கொடுக்கனுமே....?நீங்களா வந்து பதில் சொல்வீங்க?


2. முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் பேச்சு: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய, கருணாநிதி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அரிசியில் கொள்ளை, மணல் கொள்ளை, நகை மற்றும் பணம் கொள்ளை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காற்றில் ("2 ஜி' அலைக்கற்றை) கொள்ளையடித்த ஒரே குடும்பம், கருணாநிதி குடும்பம் தான். சட்டசபை தேர்தலில், ஊழல் நிறைந்த மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...


3.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் பேச்சு: சட்டம் பற்றி பேசக்கூடிய சட்டக் கல்லூரி, அரசு நிர்வாகம், நீதித் துறை என எந்தவொரு இடத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கிருப்பவர்களில் ஒருவர் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படித்திருக்கவில்லை.

அடடா. எம் எல் ஏ, எம் பிகளூக்கு மட்டும் தான் படிக்கத்தெரியாதுன்னு இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தோம்...


4. தி.மு.க., அமைச்சர் மைதீன்கானின் தம்பி முகமது இக்பால் பேட்டி: நான் வியாபாரம் செய்வதால், எல்லா மக்களையும் சந்திக்கிறேன். இதனால், மக்களின் மன ஓட்டம் புரிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்காத மைதீன்கானுக்கு, மக்களின் நிலை தெரிய வாய்ப்பில்லை. அவர் அமைச்சர் ஆவதற்கு காரணமாக இருந்த தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால், கடுமையான கோபத்தில் உள்ளனர்.

மன்னர் எவ்வழி..? மந்திரி அவ்வழி...
http://www.koodal.com/contents_koodal/article/images/thamizhachi_spl.jpg

5.சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேச்சு: பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு, தீர்வு காண, கோர்ட்டுகளை யே முழுமையாகச் சார்ந்துள்ளனர். அனைத்து பிரச்னைகளுக்கும் கோர்ட்டில் முழுமையான தீர்வு கிடைக்காது. ஓரளவு தீர்வு தான், கோர்ட்டுகள் மூலம் கிடைக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்னைகளுக்கு தாங்களே தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அது தான் பாதுகாப்பானது.

ஹா ஹா ஹா .. அப்புறம் என்ன இதுக்கோசரம் இத்தனை  கோர்ட், இத்த்னை வக்கீலுங்க இருக்காங்க..? சம்பளம் மட்டும் வாங்கிக்கவா?


6.இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து பேட்டி: தமிழகத்தில், 65 சதவீத விவசாயிகள் உள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படுவதில்லை. விவசாயிகளின் அடிப்படை தேவையான மின்சாரத்தை வினியோகிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி தண்ணீரையும் பெற்றுத் தரவில்லை.

ஊழல் பண்றதுக்கும், அந்த ஊழலை மறைப்பது எப்படி?பணத்தை பங்கு போடுவது எப்படி? இதுக்கே நேரம் போறது இல்லை...அப்புறம் எங்கே இருந்து விவசாயிகளுக்கு திட்டம் தீட்டுவது?
http://farm4.static.flickr.com/3053/2670267029_f7e2560337.jpg

7.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்: கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை, முதல் சுற்று பேச்சின்போது எட்டு தொகுதிகள் கேட்டோம்; மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிடைச்சவரை லாபம்னு ஓடிடுங்க... 2வது கட்ட பேச்சுவார்த்தைல உக்காந்தா  3 என்பது நாலாக ஆகும்னு நினைச்சா அப்புறம் நீங்க வெளீல வர ரொம்ப நாளாகும்...அப்புறம் உள்ளதும் போச்சுடா....பழமொழி ஆகிடும்...


8. வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் லூகோஸ்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் உறவினர்கள், கறுப்புப் பணம் வைத்திருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளோம். கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்படுமா என்பதற்கு பதில் அளிக்க முடியாது.

அது எப்படிங்க விசாரணை பண்ணுவீங்க... இப்போ ஆ ராசாகிட்ட மட்டும் தான் விசாரணை பண்றாங்க.. மெயின் ஸ்விட்சே கலைஞரும், சோனியாவும் தான்.. அவங்க கிட்டே விசாரணை பண்ணுவாங்களா?

9.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: எம்.எல்.ஏ., வேட்பாளர்கள் தேர்தல் செலவு, 10 லட்சத்திலிருந்து, 16 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அனைத்து செலவுகளையும், குறிப்பிட்ட வங்கிக் கணக்கு மூலமே செய்ய வேண்டும்.

ஆமாம்ப்பா.. ஞாபகம் இல்லாம உங்க சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ல கணக்கு வரவு செலவு வெச்சு சமர்ப்பிச்சுடாதீங்க.. அப்புறம் வருமான வரி த்துறை அதிகாரிங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. 


10. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி: 2006க்கு முன் வரை, தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில், பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின், இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.

பாத்துப்பா... இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தி கலைஞரைக்காட்டிக்குடுத்துடாதீங்க...

உருக வைக்கும் கவிதை..!

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இன்றைய ஜூனியர் விகடனைப் புரட்டியவுடன் முதல் பக்கத்தில் பட்டது இந்தக் கவிதை..!

விமர்சனங்கள் பலவற்றைத் எதிர்கொள்ளவேண்டிய தருணத்திலும், களத்திலும் கவிஞர் வாலி தற்போது இருந்தாலும், மனிதரிடம் தமிழ் என்னமாய் விளையாடுகிறது..!

மீண்டும், மீண்டும் படிக்க வைத்தது வாலியின் தமிழ்..! பாடுபொருளின் ஒரு பகுதியை மட்டுமே செப்பியிருக்கும் வாலி, பழியை ஏற்றுக் கொண்ட பாவத்தின் மீதியையும் இதேபோல் தன் வாழ்நாளுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..!


சொல்லைக் கல்லாக்கி.. கவிதையைக் கவண் ஆக்கி.. வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது..

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

* * * * *

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

* * * * *

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

* * * * *

இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

* * * * *

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

* * * * *

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!

நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011