அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Wednesday, March 2, 2011

கட்சியைக் கலைக்குமாறு சீமானுக்கு அச்சுறுத்தல்


கட்சியைக் கலைக்குமாறு சீமானுக்கு அச்சுறுத்தல்!

AddThis Social Bookmark Button
கட்சியைக் கலைக்கவும் இல்லயேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு
புதுச்சேரியிலிருந்து  அச்சுறுத்தல்  கடிதம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் கடிதம் புதுச்சேரியில் இருந்து வந்திருப்பதாகவும், அன்மையில் அப்பகுதியில் நாம் தமிழர் அமைப்புச் செயற்பாட்டாளர்களைக் கொலை செய்தவர்களாலேயே இந்த அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும்,நாம் தமிழர் அமைப்பின் நிரிவாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகத் தாம் கருதுவதாகவும், அதனால்  இன்று காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்திருப்பதாகவும், தங்கள் கோரிக்கையை ஏற்று, சீமானுக்கு உரிய பாதுக்காப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டிருப்பதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment