அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Wednesday, March 2, 2011

வைரமுத்துவுக்கு பாட்டு எழுத வராது, மனைவிதான் எழுதி தருகிறார்


வைரமுத்துவுக்கு பாட்டு எழுத வராது, மனைவிதான் எழுதி தருகிறார் - கவிஞருக்குப் பெருமையே!

AddThis Social Bookmark Button
வைரமுத்துவுக்கு பாட்டு எழுத வராது, மனைவிதான்  எழுதி தருகிறார் என்பதைக் கேட்டுப் பெருமையுற்றேன் என்றார் கவிஞர்
கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா மதுரையில்நடைபெற்றது.
இதில் ஏற்புரை ஏற்றுக் கவிஞர் வைரமுத்து பேசியபோது; " திரைப்படத்துறைக்குள் நுழைந்த எனக்கு எத்தனையோ அவமானங்கள், சிராய்ப்புகள், காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் நான் இன்றைக்கு தமிழக மக்களின் மனதில் நிற்கிறேன்.
விமரிசனங்களை எல்லாம் புறக்கணித்ததால் மட்டுமே திரைப்படத்துறையில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. திரைத்துறைக்குள் நான் நுழைந்த கால கட்டத்தில் என்னால் பாட்டுகளை எழுதவே முடியாது. எனக்கு என் மனைவி தான் எழுதி தருகிறாள். வைரமுத்து அதை கொண்டு சென்று விற்று வருவதாக கூட பேசினார்கள். இதையெல்லாம் நான் கேட்ட போது, எனது மனைவிக்கும் எனக்கு இணையான கவுரவத்தை அளித்ததாக மகிழ்ச்சி தான் இருந்தது. இப்படி பேசியவர்கள் மீது எனக்கு கோபமில்லை.
இது போல் நான் பாடல்கள் எழுதினால் அந்த படமே ஓடாது என்று கூட சொன்னார்கள். ஒரு கட்டத்தில் மெட்டுக்களை சொன்னால் சொன்னால் அதே இடத்தில் பாடல்களை எழுதி கொடுத்து வந்தேன். அந்த அளவுக்கு என்னை நிலைநிறுத்தி கொள்ள திரைத்துறையில் நான் உழைக்க வேண்டி இருந்தது. இது போல் ஒரு கவிஞராக,  பல அவமான சம்பவங்கள் எனக்கு நேர்ந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி என்னை நான் இன்றைக்கு அடையாளப்படுத்திக் கொண்டு இந்த உயரத்தை எட்டியிருக்கிறேன். அவமானங்களை கண்டு துவண்டு விடக்கூடாது.
என் பாட்டுக்கள் விவகாரத்து செய்ய இருந்தவர்களை ஒன்று சேர்த்துள்ளன. தற்கொலைக்கு போனவர்களை தடுத்து நிறுத்தியுள்ளன. வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் சோர்ந்து போனவர்களை தேற்றி புதிய வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையை ஊட்டியுள்ளன. இப்படி நம்பிக்கையை தருவதாக எனது பாடல்கள் இருந்தது எனக்கு கிடைத்த மற்ற எல்லா பாராட்டுகளையும் விட மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. இதையே எனக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதுகிறேன்.
கவிஞர்கள் கற்பனையாலும், நிகழ்காலத்தோடு ஒன்றி போவதாலும் தலைமுறைகளை தாண்டி நினைவில் நிற்கும் அளவுக்கு கூட பாடல்களை எழுத முடியும். அதற்கு தங்களுக்கென்று பாடல்களை எழுதுவதில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment