அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Thursday, August 18, 2011

விஜயகாந்தை காணவில்லை


விஜயகாந்தை காணவில்லை..குஷ்பூ கைது

விஜயகாந்தை காணவில்லை....குஷ்பூ முதன்முறையாக...






2011 தேர்தல் முன்புவரை விஜயகாந்து விஜயகாந்துன்னு ஒரு ரோசக்கார நடிகரும் சுயமரியாதை உடைய அரசியல்கட்சி தலைவருமாய் ஒருத்தர் இருந்தார்.. அந்த மனுசனை 2011 தேர்தலுக்கு பின் காணவில்லை...எதிர்கட்சி தலைவர் அளவுக்கு ஜெயலலிதா தன்னை உயர்த்துவார் என அவர் கனவிலும் நினைத்திருப்பாரா என்ன..? அதனால் விக்கித்து போய் அந்த பிரமிப்பிலேயே மனுசர் படுத்துட்டார் போல..

எத்தனையோ கூட்டத்தில் எத்தனையோ முறை பேசியும் ஒரு சீட்தான் கிடைத்தது.,ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததும் 29 சீட்டுக்கள் கிடைதது என்றால் ஜெயாவின் சக்தி இப்போது அவருக்கு புரிந்திருக்கும்.

அதே சமயம் கருணாநிதி ஆட்சியில் சீறி திரியும் சிங்கமாய் அவர் கர்ஜித்தது என் நினைவுக்கு வருகிறது..இன்று இந்த ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக இருந்தும் ஜெயா வை எதிர்த்து பேசாமல் இருக்கும் மர்மம் என்ன..?கருணாநிதி ஆட்சியில் எப்படி வேணாலும் கூவலாம்..அது தடியெடுத்தவன் தண்டல்காரன் கட்சி .ஆனா இங்க பப்பு வேகாது..ராமதாசே தி.மு.க வை விட்டு அரண்டு போய் ஓடி வந்துவிட்டார்.
ராஜதந்திரத்தில் ஜெயலலிதா வை மிஞ்ச ஆள் இல்லை.ஒருவரை கட்டம் கட்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்.கூட்டணியில் எவ்வளவு பலமாக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் அவர் நடவடிக்கை உக்கிரமாக இருக்கும்.

இதுதான் விஜயகாந்தின் பயத்துக்கு காரணம்....தன் கட்சி வளர வேண்டுமானால் ,ஜெயா ஆட்சியில் மவுனமாக இருப்பதே ஒரே வழி என்பது அவர் தெளிவாக புரிந்திருக்கிறார்.அது மட்டுமில்லாமல் இன்னும் அஞ்சு வருசத்துக்கு ஜெயாவை ஒண்ணும் செய்யமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்....கருணாநிதி கட்சி மூழ்கும் கப்பல்.இனி நிரந்தர எதிர்கட்சி தலைவர் தாம் தான் என்பதில் கேப்டன் தெளிவாக இருக்கிறார்.
----------------------------------------

கேஸ் சிலிண்டர் விலையையும் இனி எண்ணை நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும்...என திருவாய் மலர்ந்திருக்கிறார்...மத்திய அமைச்சர் என்ன கொடுமை இது...பெட்ரோல் விலையை மாதம் ஒரு விலை உயர்த்தும் எண்ணை நிறுவனங்கள் கையில் உயிர்நாடியான சிலிண்டர் விலையை உயர்த்தும் உரிமத்தை கொடுத்தால் என்னாகும் 1000 ரூபாய் சொன்னாலும் வாங்க வேண்டி வருமே..இது ஒண்ணு போகும்..காங்கிரஸ் இந்தியா முழுவதும் உள்ள தாய்குலங்களின் வாக்கு வங்கியை பாரதிய ஜனதா வுக்கு மாற்றுவதற்கு....இனி எக்காலத்திலும் தி.மு.க போலவே காங்கிரசும் ஆட்சியை பிடிக்க முடியாது..
---------------------------------------------
ராசாத்தியம்மாளின் கணக்குபிள்ளையை கைது செய்துவிட்டார்கள்...இனி ராசாத்தியம்மாவும் கலைஞர் கூடவேதான் இருப்பார்..அவ்வளவு சோதனையான நேரம் அவருக்கு..சும்மாவா நிலமோசடி வழக்கு என்ன சாதரணமா...அதிலும் அந்தம்மா...ஹிஹி....கலைஞர் வீட்டை சுற்றி சுற்றி வரும் நிலமோசடி வழக்குகள்..எந்த நேரமும் வீட்டுக்குள் நுழையலாம்....
-----------------------------------------
தி.மு.க வின் சத்தில்லாத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது ஆகியிருக்கிறார் முன்னாள் குலுக்கல் நடிகை குஷ்பூ....அரசியல் பாலபாடம் கற்க கருணாநிதியிடம் வந்த அவர் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கைது ஆகியிருக்கிறார் என நினைக்கிறேன்..ஆனா அம்மணி நல்ல ராசியானவர் தான் இவர் அந்த கட்சியில் சேர்ந்தபிந்தான் அந்த கட்சி உருப்படாம போச்சி....இப்ப கைது ஆகியிருக்கிறார்..இனி முக்கிய தலைவர்களும் கைது ஆவாங்களோ என்னவோ....


அதிரடி அம்மாவும்,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்


அதிரடி அம்மாவும்,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்

நக்கீரனில் வெளிவந்த அந்த கட்டுரையை படித்தபோது ,ஆச்சர்யப்பட்டேன்.மு.க.அழகிரி கைதுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.காந்தி அழகிரி கைதெல்லாம் வேண்டாம்..ஸ்ட்ரைட்டா தலைக்கே குறி என செய்தி கிடைத்தது.

அப்படியே ஜூனியர்விகடன் படித்தால் அஞ்சாநெஞ்சனின் மனைவி,தில்லாக பேட்டி கொடுத்திருந்தார்.அந்தம்மா கிட்ட எல்லாம்,சரண்டர் ஆக மாட்டோம்.வழக்கு வந்தால் எதிர்கொள்வோம் என சூளுரைத்திருந்தார்.இந்தம்மா ஒரு நாள் சிறை கொசுக்கடிகூட தாங்காது எப்படி தில்லா பேட்டி கொடுக்குதே என யோசித்தேன்.இப்பதான்,பொட்டு சுரேஷ்க்கு கூட முதல்வகுப்பு அறை கொடுத்துருக்காங்களே ..மெத்தையாம்,கொசுவர்த்தியாம்,ஹோட்டல் சாப்பாடாம்,ஈவினிங் ஸ்வீட்,காரம் எல்லாம் இருக்காம்.அந்த தைரியமோ என்னவோ.

-------------------------------
திருச்சி,விழுப்புரம் மக்கள் நம்ம தலைகளை ஏன் கைது பண்ணலை என ஜெ..மீது கோபமாக இருக்கிறார்களாம்.முன்னாள் அமைச்சர் நேரு,பொன்முடியைதான் சொல்றேன்.வழக்கு இன்னும்மா தயார் பண்றீங்க..?சீக்கிரம் ஆகட்டும்பா.
------------------------------

சாந்தன்,பேரறிவாளன்,முருகனுக்கு தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் வைகோ.முதல்வாரம்தான் பிரதமரையும்,ப.சிதம்பரத்தையும் சந்தித்து,அவர்கள் விடுதலைக்காக மனமுருக வேண்டுகோள் வைத்துவிட்டு வந்தார்.முதுகில் குத்துவது போல இடி போல இந்த செய்தி வந்திருக்கிறது.பேரறிவாளன் மீதான குற்றசாட்டு என்ன தெரியுமா.9 வாட் பேட்டரி வாங்கி சிவராசனுக்கு கொடுத்தாராம்.9 வாட் என்பது டார்ச் லைட்டுக்கு போடக்கூடியது.அதுக்கு எந்த பெட்டிக்கடையில் ரசீது தருகிறார்கள்..?சி.பி.ஐ.அதற்கு ஆதாரமாக பேட்டரி செல் ரசீது காட்டி 20 வருடமாக அவரை அடைத்து வைத்து இன்று தூக்கு தண்டனை வரை கொண்டு வந்துவிட்டது.

ராஜீவ் காந்தி அமைதிபடை என்னும் பெயரில் இலங்கையில் செய்தவை,மற்றும் காங்கிரசின் மறைக்கப்பட்ட உண்மைகளை வீதிக்கு வீதி அம்பலப்படுத்துவோம் என ஆவேசப்படுகிறார் வைகோ.போராடு தலைவா.
---------------------------------------------
அன்னா ஹசாரே வைக்கும் அடுத்தடுத்த ஆப்புகளால் கதிகலங்கி கிடக்கிறது மத்திய அரசு.7 நாள் நிதிமன்ற காவல் என சொல்லிவிட்டு அவசர அவசரமாக ராத்திரியே விடுதலை செய்தது..தப்பிச்சோம்,பிழைச்சோம் என ஓடிப்போவார் என பார்த்தார்கள்.மனுசன் வெளியே போகமட்டேன் என சொல்லிவிட்டு அங்கியே உண்ணாவிரதம் உட்கார்ந்துவிட்டார்.இத என்ன செய்றது என சிதம்பரம் கண்ணாடியை கழட்டிகொண்டு அழுகிறாராம்.அன்னாவை இன்னொரு மகாத்மா ஆக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.ஏங்கய்யா இப்படி சொதப்புறீங்க..?

விஜயகாந்த் வீட்டு திண்ணை, ராமதாஸ் வீட்டில் வெண்ணெய்!


விஜயகாந்த் வீட்டு திண்ணை, ராமதாஸ் வீட்டில் வெண்ணெய்!


சென்னை, இந்தியா:
 தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறியது பற்றி வெவ்வேறு கதைகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் சமீப நாட்களாக அடிபடத் தொடங்கியுள்ளன. பா.ம.க.வின் வெளியேற்றம் பற்றி யாருமே வியப்பு அடையவில்லை. அது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அதன் பின்னாலுள்ள காரணம்தான் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகின்றது.
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியதற்காக காரணம் கூறிய பா.ம.க., பொதுவாக திராவிடக் கட்சிகளைச் சாடினாலும், அந்தத் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. பற்றி பெரிதாக பேசுவதில்லை. ஆனால், தி.மு.க.வை மிகக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.
“இந்தப் போக்கே, பா.ம.க.வின் அடுத்த திட்டத்தைக் காட்டிக் கொடுக்கிறது” என்கிறார் விஷயமறிந்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.
பா.ம.க. வெளிப்படையாக அணுகாவிட்டாலும், மறைமுகமாக சில தொடர்புகளை அ.தி.மு.க.வுடன் ஏற்படுத்த முயல்கின்றது என்பதை உறுதிப்படுத்தினார் அவர். அ.தி.மு.க.வின் இரு அமைச்சர்கள் மூலமாக, பா.ம.க. தூதுவிட முயற்சிப்பதாகவும் கூறுகிறார் அந்த அ.தி.மு.க. பிரமுகர்.
டாக்டர் ராமதாஸ்மீது பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், போட்டிருந்த வழக்கு ஒன்று இன்னமும் முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க. அரசு, அந்த வழக்குக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறதாம், பா.ம.க. தலைமை.
நாம் தொடர்புகொண்ட அ.தி.மு.க. பிரமுகர், “டாக்டர் ஐயா போலீஸ் ஸ்டேஷன் படியேறுவதைத் தவிர்க்கவே, பா.ம.க.வில் இருந்து மிகக் கடுமையான தி.மு.க. எதிர்ப்பு அறிக்கைகள் வந்து விழுகின்றன. இது எமக்கும் நன்றாகத் தெரியும். நமக்கு என்ன? அவர்களாகவே தி.மு.க.வைப் போட்டுத் தாக்குகிறார்கள். நாம், ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்” என்று சிரிக்கிறார்.
அத்துடன் ஒரு லாங்-ஷாட் காரணமும் உண்டாம். விரைவில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. தனியே போட்டியிட நினைத்து, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்தால், அந்த இடத்துக்கு விண்ணப்பம் போட விரும்புகிறதாம் பா.ம.க. தலைமை.
அதுவும் சாத்தியமே. காரியம் ஆக வேண்டுமென்றால் பா.ம.க., பாகிஸ்தானுடனும் கூட்டணி  அமைக்க கூச்சப்படாது  என்பது, அவர்களது வரலாறு

தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!



ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!

கோவை, இந்தியா: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுபற்றி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுவே, நிராகரிக்கப்பட்டுள்ளது.
கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் ஒரு பகுதியினர் நேற்று (செவ்வாய் கிழமை), கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரியார் தி.க. பொதுச்செயலர் கே.ராமகிருஷ்ணன், “சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மதுரையிலும், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் தமிழ் ஈழ ஆதரவு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
கருணை மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், இம் மூவரையும் வேலூர் சிறையில் சென்று சந்தித்திருந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவர்களைச் சந்தித்தபின் கருத்து தெரிவித்த அவர், “ராஜிவ் கொலை வழக்கில், முதலில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சித்தரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் அடிப்படையில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.
அந்த எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு , 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேல் முறையீடு செய்ததில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். தற்போது இந்த கருணை மனுக்களைதான்  ஜனாதிபதி நிராகரித்துள்ளார். மத்திய அரசு நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.
தமிழகத்தில், 13 ஆண்டுகள் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மூவரின் உயிர்களையும் காப்பாற்ற முன் வருவார் என நம்புகின்றேன். இம்மூவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். வேலூர் மத்திய ஆண்கள் சிறை வாசலில் இருந்தவாறு இம்மூன்று பேரின்  உயிர்களைக் காப்பாற்றும்படி தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியிருந்தார்.
இப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய தினசரி செய்திப் பத்திரிகை ஒன்று, இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட தமிழ் பத்திரிகையை வெளியிடும் குழுமம், அவர்கள் வெளியிடும் சகல பிரின்டட் மீடியா பிரசுரங்களிலும், சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவரும் ராஜிவ் காந்தியைக் கொலை செய்த  கொலையாளிகள் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நிஜத்தில், இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது, அவர்கள் ராஜிவ் காந்தி வழக்கில் ‘கொலையாளிகள்’  என்ற அடிப்படையில் அல்ல. அந்தக் கொலைக்கான திட்டமிடலுக்கு உதவி செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது!
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்,  தற்போதுள்ள ஒரு தலைமுறையே,  இந்தக் கொலை நடைபெற்ற காலகட்டத்துக்குப்  பின்னர் பிறந்துள்ளது. அவர்கள், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்தே, இந்தக் கொலை வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் நிலை.
இப்படியான நிலையில்தான், குறிப்பிட்ட தமிழ் தினசரி பத்திரிகை, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்தான் ‘கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு வருகின்றது.
இந்த திட்டமிட்ட நடவடிக்கை,   தமிழகத்தில் தற்போதுள்ள இளை தலைமுறையினருக்கு இந்த மூவரையும் பற்றிய தவறான இமேஜ் ஒன்றை ஏற்படுத்தும்  பிரசார முயற்சி என்றே ஊகிக்கலாம்.
உண்மையில் ராஜிவ் காந்தி கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, யார்யார் தொடர்புடையவர்கள் என்ற விபரங்களை, விறுவிறுப்பு.காமில், ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை என்ற தொடரில் விளக்கமாகக் கொடுத்து வருகிறோம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால்  சிறிதாகக் கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் மற்றைய பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது
.

தீவிரவாதிகளுடன் உமது தொடர்புகளுக்கு ஆதாரம் இதோ!



தீவிரவாதிகளுடன் உமது தொடர்புகளுக்கு ஆதாரம் இதோ!


• நிலைமை மோசமாகவே சி.ஐ.ஏ.யின் தலைவர், இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு நேரில் சென்றிருந்தார்.

இஸ்லாமபாத், பாகிஸ்தான்: சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பகீர் ஆதாரங்களை காண்பித்திருக்கின்றார். பாகிஸ்தானில் வைத்தே, பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, மற்றும் உளவு அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.
“சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் செய்துவரும் பல ஆபரேஷன்கள் பற்றிய விபரங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு முன்கூட்டியே தெரியவந்து விடுகின்றன. இதனால் அவர்கள் உஷாராகி, தப்பி விடுகின்றனர். தீவிரவாதிகளுக்கு தகவல் போவது எப்படி? அதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகளுக்கு ஆட்கள் இருக்க வேண்டும்” இவ்வாறு சி.ஐ.ஏ. சமீபகாலமாக வெளிப்படையாகக் கூறிவருகின்றது.
அதை பாகிஸ்தானியத் தலைமை மறுத்தும் வந்துள்ளது.
நிலைமை மோசமாகி வரவே சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, இரு தினங்களுக்குமுன் பாகிஸ்தானுக்கு நேரில் சென்றிருந்தார். பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் ஆஷ்பக் கயானி, உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப். ஜெனரல் அஹ்மட் பாஷா ஆகியோரை அவரச கூட்டம் ஒன்றுக்கு அழைத்தார்.
அப்போதும் பாகிஸ்தான் தரப்பு, “எமது பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து ரகசியங்கள் ஏதும் தீவிரவாத அமைப்புகளுக்கு லீக் செய்யப்படுவதில்லை. நீங்கள் (சி.ஐ.ஏ.) கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு” என்பதையே  மீண்டும் வலியுறுத்தினர்.
இதையடுத்து சி.ஐ.ஏ.யின் தலைவர், “எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து, உங்களது ராணுவத்துக்கு உள்ளேயே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.
இதை கோபமாக மறுத்த பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, “ஆதாரம் ஏதுமில்லாமல் எமது ராணுவத்தினர்மீது குற்றம்சாட்டக் கூடாது” என்றார்.
அதன் பின்னரே லியோன் பனெடா, தம்மிடமுள்ள ஆதாரங்கள் சிலவற்றை மேஜையில் தூக்கிப் போட்டார்.
சி.ஐ.ஏ. தலைவர் காண்பித்த ஆதாரங்களில், பல டாக்குமென்ட்களுடன், 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் இருந்தது. பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்கு உள்ளே படம்பிடிக்கப்பட்ட வீடியோ அது!
பாகிஸ்தானின் இரு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளை நடாத்திவருவது பற்றிய உளவுத் தகவல்கள் சி.ஐ.ஏ.க்குக் கிட்டியிருந்தது. இதில் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலை வடக்கு வாசிரிஸ்தானிலும், மற்றையது தெற்கு வாசிரிஸ்தானிலும் அமைந்திருந்தன.
குறிப்பிட்ட தொழிற்சாலைகள் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்திருந்த சி.ஐ.ஏ., தம்மிடமிருந்த தகவல்களை பாகிஸ்தானிய ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தானிய ராணுவத்தை வைத்தே, அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலைகள் இரண்டையும் ரெயிட் செய்யும் ஆபரேஷனை மேற்கொண்டது.
ஆனால், ரெயிட் நடைபெற்ற நேரத்தில், இரு இடங்களிலும் ஏதுமில்லை. எல்லாமே மாயமாகி விட்டிருந்தன.
“சி.ஐ.ஏ.க்கு கிடைத்த தவறான தகவலின் பேரில் நடைபெற்ற ரெயிட்” என்று கூறி, இரு ஆபரேஷன்களையும் முடித்துக் கொண்டது பாகிஸ்தானிய ராணுவம்.
இப்போது, சி.ஐ.ஏ. தலைவரினால் இஸ்லாமபாத்தில் வைத்துக் காண்பிக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணி படமாக்கப்பட்டிருந்தது. எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ, தீவிரவாத அமைப்பினரில் இரு வெடிகுண்டுத் தொழிற்சாலைகளிலும் ரகசியமாக எடுக்கப்பட்டவை!
தொழிற்சாலைகளை ராணுவம் சுற்றி வளைக்கப்போகும் தகவல், தீவிரவாத அமைப்பினருக்கு வந்து சேருவதும், உடனே அவர்கள் துரிதமாகச் செயற்பட்டு, தமது தொழிற்சாலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் சி.ஐ.ஏ.யால் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருந்தன.
“எமக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நாம் நேரடியாக ஆபரேஷன்களை பாகிஸ்தானுக்குள் செய்தால், அதையும் எதிர்க்கிறீர்கள். உளவுத் தகவல்களை உங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினால்,  உங்கள் ஆட்களாலேயே தகவல்கள் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருகின்றன” என்று சி.ஐ.ஏ.யின் தலைவர் கூறியதற்கு, பாகிஸ்தானின் தரப்பிலிருந்து கூறப்பட்ட பதில் என்ன?
“நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம்” அவ்வளவுதான்!

• பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்

!

போர் முடிவடைந்த பின்


போர் முடிவடைந்த பின்னரும் ரஷ்யாவிடம் இராணுவ ஹெலிக்காப்டர்கள் கொள்வனவு
18 Aug 2011
யுத்தம் முடிவுற்று இரண்ட வருடங்கள் கடந்துள்ளநிலையில் இலங்கை அரசானது ரஷ்யாவின்  எம்.ஐ 171 ரக 17 இராணுவ ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்துள்ளதாக ரஷ்ய அரச ஆயுத ஏற்றுமதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரொசோபோன் எக்ஸ்போர்ட் எனும் ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் எனட்டோலி இஸேஸ்கிங் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

எண்ணெய் அகழ்வு தொடர்பாக ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஹெலிகொப்டர் கொள்வனவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விமானக்கொள்வனவு குறித்து தமக்கு எதுவும தெரியவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மற்றும் விமானப்படையும் தெரிவித்துள்ளது.

ஆனால், இது படையினரின் சிவிலியன் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.

ரஷ்யாவின் உலான் உதே விதான நிறுவனத்தினால் தயாரிக்கப்ட்டுள்ள இந்த ஹெலிகொப்டர்கள் இராணுவத் தேவைகள் மற்றும் பிரமுகர்களுக்கான பொருட்களை ஏற்றிச் செல்லல் என நான்கு ரகங்களைச் சேர்ந்தவை என ரஷ்ய அரச செய்திச் சேவையான ITAR-TASS குறிப்பிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் ரஷ்ய அரசாங்கம் அந்த நாட்டிடம் இருந்து யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கிய கடன் சலுகையின் அடிப்படையில் இந்தக கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய அரச செய்திச் சேவைமேற்கோள் காட்டி ரொய்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த ஹெரிகொப்டர் கொடுக்கல் வாங்கல்களின்  மொத்த பெறுமதி குறித்து ரஷ்ய அதிகாரிகள் தகவல் எதனையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றதிலிருந்து ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய இலங்கை அரசாங்கத்துடனான உறவுகளை அதிகரிப்புதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள்

ஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03




இது ஃபேஸ்புக் பதிவு...
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பார்த்த ரசிக்கத்தக்க நகைச்சுவை ஸ்ரேட்டர்ஸ்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நீங்களும் ரசித்து பகிரிந்துகொள்ளுங்கள்.
( இந்த வசங்களின் உருமையாளர்கள் நிச்சயமாக ஸ்ரேட்டர்ஸ் போட்டவர்களாக இருக்க மாட்டார்கள். :P Bz அவர்கள் என் நண்பர்கள் நிச்சயம் சுட்டுத்தான் போட்டு இருப்பார்கள் :P ஆகவே, உண்மையான உரிமையாளர்கள் பொறுத்துக்கொள்ளவும். )
-------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்.

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் ...
1.மச்சி நான் full steady டா..
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி .
5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்..
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா


(Last but not least...பசங்க சொல்லும் மெகா தத்துவம்
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா..

ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான்.
முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி 'நான் போகிறேன் என்றான்'


உடனே அவள் "எங்க போற? யார் கூட போற? ஏன் போற? எப்ப திரும்பி வருவ? " என்று கேள்விகளை கேட்டு முடிக்க முன் phonai கட் பண்ணி விட்டு தன் நண்பணுக்கு phone பண்ணி.


நான் போறேண்டா என்ற உடனே நண்பன் சொன்னனா.
"இருடா மச்சான் நானும் வாறேண்டா "
நண்பேன்டா....



அழகான பெண் என நாம் 1 செகண்டில் முடிவுக்கு வருவதற்கு, பாவம் அவர்கள் 1 மணி நேரம் மெனக்கெட்டு மேக்கப் போடுகிறார்கள்...

ஒரு பிகரானது சுப்பர் பிகரா இல்லை சுமார் பிகரா எண்டு அதன் பின்னால் சுற்றும் ஆண்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடலாம்..!!!
**அப்பா ரௌடியாக அல்லது நிறைய ஆண் சகோதரங்கள் இருந்தால் இந்த விதி பொருந்தாது..:)


NIGHT தூக்கம் வரலைனு சோபா மேல படுத்தது தப்பா போய்டு..?
ஏன்?
சோபா புருஷன் சண்டைக்கு வந்துடான்.

Fb 'ல pickup ஆகுற பொண்ணும்.... Tea கடைல விக்குற bann'ணும்... நிச்சயமா பல பேரு கை மாறி தான் வந்திருக்கும் ...
ஜாக்கிரதை மச்சி..

காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி ஒழுங்கா பாக்கலின்னா காக்கா கொண்டு போயிரும் ...


“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி



பேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”
காலை எழுந்தவுடன் Facebook-பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..


-------------------------------------------------------------------------------------------



Son: அப்பா சின்ன வீடுன்னா என்னப்பா ?
Father: ஏண்டா?
Son: தெரிஞ்சு வச்சிக்கலாம்னு தான் பா
Father: தெரியாம வச்சிக்கிட்டா தாண்டா அது சின்ன வீடு.... !!! :-P



பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா .?
நாம அவல லவ் பண்றத பார்த்து அவ Friend நமளோட ஓடி வரணும்...


மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...!!


சீதனம்.....!!
1960 - 10 சவரன் தங்கம்,
1970- கலர் ரீவி,
1980- பைக்,
1990- காணி அல்லது வீடு,
2000- ஏ.சி கார்,
2011- ஒண்ணுமே வேணாம்.
பொண்ணுக்கு Facebook லே எக்கவுண்ட் இல்லாம இருந்தாலே போதும்.

என் காதலை அவளிடம் சொல்லக் கூட நான் அவ்வளவு பயப்படவில்லை . ஆனால் என் நண்பனிடம் அதை சொல்லப் பயந்தேன்

காரணம்

அவளிடம் 4 ரூபாய்க்கு ROSE வாங்கிக் கொடுத்த விஷயத்தை சொன்னால் இவன் 400 ரூபாய்க்கு TREAT கேட்பான்.

நண்பேன்டா...