அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Thursday, August 18, 2011

போர் முடிவடைந்த பின்


போர் முடிவடைந்த பின்னரும் ரஷ்யாவிடம் இராணுவ ஹெலிக்காப்டர்கள் கொள்வனவு
18 Aug 2011
யுத்தம் முடிவுற்று இரண்ட வருடங்கள் கடந்துள்ளநிலையில் இலங்கை அரசானது ரஷ்யாவின்  எம்.ஐ 171 ரக 17 இராணுவ ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்துள்ளதாக ரஷ்ய அரச ஆயுத ஏற்றுமதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரொசோபோன் எக்ஸ்போர்ட் எனும் ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் எனட்டோலி இஸேஸ்கிங் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

எண்ணெய் அகழ்வு தொடர்பாக ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஹெலிகொப்டர் கொள்வனவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விமானக்கொள்வனவு குறித்து தமக்கு எதுவும தெரியவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மற்றும் விமானப்படையும் தெரிவித்துள்ளது.

ஆனால், இது படையினரின் சிவிலியன் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.

ரஷ்யாவின் உலான் உதே விதான நிறுவனத்தினால் தயாரிக்கப்ட்டுள்ள இந்த ஹெலிகொப்டர்கள் இராணுவத் தேவைகள் மற்றும் பிரமுகர்களுக்கான பொருட்களை ஏற்றிச் செல்லல் என நான்கு ரகங்களைச் சேர்ந்தவை என ரஷ்ய அரச செய்திச் சேவையான ITAR-TASS குறிப்பிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் ரஷ்ய அரசாங்கம் அந்த நாட்டிடம் இருந்து யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கிய கடன் சலுகையின் அடிப்படையில் இந்தக கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய அரச செய்திச் சேவைமேற்கோள் காட்டி ரொய்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த ஹெரிகொப்டர் கொடுக்கல் வாங்கல்களின்  மொத்த பெறுமதி குறித்து ரஷ்ய அதிகாரிகள் தகவல் எதனையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றதிலிருந்து ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய இலங்கை அரசாங்கத்துடனான உறவுகளை அதிகரிப்புதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment