அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, February 19, 2011

அதிமுக-தேமுதிக


அதிமுக-தேமுதிக ஒருங்கிணைய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் 'மறைமுக' கருத்து


திருப்பூர்: திமுகவை வெல்வதற்கு எம்ஜிஆர் சக்திகள் (அதிமுக-தேமுதிக) ஒருங்கிணைய வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

நீதிமன்ற உத்தரவால் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் திருப்பூரில் 4.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவுடன் உடனடி தீர்வு குறித்து திமுக அரசு யோசித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

அதேபோல மீனவர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை என தமிழகத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை. தேர்ந்தெடுக்கக் கூடாதவர்களை நாட்டு மக்கள் தேர்வு செய்ததே இதற்குக் காரணம்.

காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று ஊழல் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை மேலும் ஆட்சியில் அமர்த்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்.

எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமர முடியவில்லை. அதேநிலை மீண்டும் ஏற்பட, எம்ஜிஆர் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். அதற்கு, எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியும், எம்ஜிஆரின் உண்மை விசுவாசியின் (விஜயகாந்த்தை சொல்கிறார்) கட்சியும் ஒருங்கிணைய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment