அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, February 19, 2011

உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட பெண் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பினார்


உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட பெண் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பினார்

AddThis Social Bookmark Button
சவூதி அரேபியாவிலிருந்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட 30 வயது நிரம்பிய பெண்
ஒருவர் இலங்கைக்கு திரும்பியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் காலியைச் சேர்ந்த திருமணமான அப்பெண் உடலில் ஊசி போன்ற 4 கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையிலேயே திரும்பியுள்ளதாகவும் சிகிச்சைகள் மூலம் அவை அகற்றப்பட்டபின்னர் இன்னமும் அவர் வைத்தியசாலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியாவில் வைத்து வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்த அவரை வீட்டு உரிமையாளர் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்த முயன்ற போது அதற்கு அவர் இணங்காமையால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக 2000 ஆண்டிலிருந்து வேலைசெய்து வரும்  மற்றுமொரு பெண்ணுக்கு அவர் பணிபுரிந்ததற்கான  சம்பளத்தை உரிமையாளர்கள் (10 வருடங்கள்) இதுவரை வழங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment