அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

திருடிகள் ஜாக்கிரதை


திருடிகள் ஜாக்கிரதை....

அய்...விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு வந்திருச்சே...போன வாரம் ஈரோட்ல ஒரு வேலை...

எங்களுக்கு ஈரோடுதான் செல்லம்....சாப்பிங் ஆகட்டும்......ஆஸ்பிட்டல் ஆகட்டும்..எல்லாம் அங்கேதான்...போகும்போது ஒரு லிஸ்டே இருக்கும்..

அன்னிக்கும் அப்ப்டித்தான்...மிக்ஸி ரிப்பேருக்கு கொடுக்க கையில் கனத்துடன்...ஒரு பிக் சாப்பரில் உட்கார்ந்திருந்தது.....அதாங்க...கட்டப்பையின்னுவாங்களே அதுதான்..

அப்பத்தான் வூட்டுக்கடன் பணத்த வங்கியில கட்டிவிட்டு காலியான்..??? பெரிய கேஸ்பேக்கும் அதில் செலவுக்கு கொஞசம் பணம்...ஒரு செல்போன்..அவ்வள்வுதான் இருப்பு...

இரண்டு பெண்கள் பயர்சர்வீசில் ஏறினார்கள்...என்னருகே ஒருத்தி நின்று கொண்டாள்...என் பை இருவருக்கும் நடுவிலிருந்தது...ஏனோ சரியாக நிற்காமல் நெளிந்து கொண்டே இருந்தாள்...

பார்க் வருவத்ற்குள் ஏதோ சந்தேகத்தில் பையை திறந்துபார்த்தேன்..கேஸ்பேக் கானோம்...சந்தேகமே இல்லை....இவள்தான் காலாலேயே எத்தி எடுத்திருக்கிறாள் என்று பட்டது...

“ என் பேக காணொம்...நீதான் எடுத்திருக்கிறாய்....மரியாதையாக் குடுத்திரு” ...ன்னு சத்தம் போட்டேன்....

கண்டக்டர் எங்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்துபார்த்துவிட்டு கடமையே கண்ணாக....???? டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்...

அவள் ”என்ன இந்தம்மா லூஸ் மாதிரி பேசுது”என்று யாரையோ பார்த்து சொன்னாள்....எனக்கு கோபம் வந்துவிட்டது.......நான் விடவில்லை...”நானாடி லூசு....வா போலீஸ் ஸ்டேசன் போகலாம்”எத்தனி பேருடி இருக்கிறீங்க பஸ்ஸுக்குள்ள” என்றேன்...

அவளையும், உடன் வந்தவளையும் புடைவையை உதறிக்காட்டச்சொன்னேன்.....ஒன்றும் இல்லை....இனி என்ன செய்வது....

“டிரைவர் வண்டியை ஸ்டேசன்ல நிறுத்துங்க...கண்டிப்பா என் பேக பஸ்ஸுக்குள்ளதான் இருக்குது யார்கிட்டயோ...”. 

அதில இப்பகட்டுன பேங்க ரசீது மட்டும்தான் இருக்குது.....பணமெல்லாம் இல்லை...செக் பண்ணிடலாம்” என்று சப்தம் போட்டேன்..

அமைதியோ அமைதி....இரண்டு நிமிடத்தில் நாலுசீட் பின்னால் இருந்த ஒரு பெண் சத்தம் போட்டார்...”ஒரு பேக் இங்க கிடக்குது....உங்களுதா பர்ருங்க”

என் பேக்கேதான்....எப்படி கை மாத்திருக்காங்காங்க..பாருங்க...பணம் ஒன்றும் இல்லை...என்றதும் கீழே வீசிட்டாங்க.....யோசித்துப்பார்த்தேன்...கிடைச்சுருச்சு...இனி என்னானு புகார் தருவது...

சாட்சி யாருன்னு கேட்பாங்களோ...ஒருத்தரும் வரமாட்டாங்க...பேக கிடைத்த நிம்மதியுடன் அமைதியாகிவிட்டேன்...அலட்டிக்காம அவங்களும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப்போய்ட்டாங்க...

டிஸ்கி:...இதனால் தெரிந்துகொள்ளவேண்டிய நீதி என்னவென்றால் பிக் சாப்பரில் பர்ஸ் போன்ற பொருள்களை வைக்காதீங்க...பெண் திருடிகளும் நிறைய இருக்காங்க...அவங்க தனியா வரமாட்டாங்க.. எடுத்ததும் அடுத்த ஆளுக்கு கை மாத்திடறாங்க.. அது பஸ் ஆக இருந்ததாலும் நான் உடனே பார்த்துவிட்டதாலும் பரவாயில்லை...

இதுவே பொது இடங்கள் நெருக்கமான விழாக்கூட்டங்கள் போன்றவற்றில் நாம்தான் ஜாகிரதையாக இருக்கவேண்டும்..அடிக்கடி நம் நகைகள் கழுத்தில் இருக்கிறதா என்று செக் செய்யவேண்டும்...சிறு குழந்தைகளுக்கு நகைகள் அணிந்து எடுத்துச் செல்வதை தவிர்க்கவேண்டும்..

 பஸ்களில் இதுபோல் நடந்தால், .சந்தேகப்பட்டால் சும்மாவாச்சும் போலீஸ்....போலீஸ் என்று கூவுங்கள்...நிஜமாவே அவங்க திருடவில்லை என்றால் என்ன உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாங்கதானே...மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா என்று கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்....அத வொர்கவுட் பண்ணிப் பார்த்தேன்..நிஜமாப்போச்சு.......

அதேமாதிரி பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது நம்மை இடித்துக்கொண்டு பதினைந்துவயது பசங்கள் பெண்கள் வழியில் ஏறுவார்கள்....அவ்ர்களின்குறியும் இதே பிக்சாப்பர்தான்...படக்கென்று கைவிடுவார்கள்...நாம் உசாராக என்னவென்று கேட்டால் தெரியாமல் பட்டுருச்சு என்று சொல்லி சட் என்று அந்த இடத்த விட்டு நகர்ந்து விடுவார்கள்.....சும்மாவா சொன்னாங்க...தூங்கும்போதுகூட கால ஆட்டிக்கிட்டு தூங்கணும்....இல்லாவிட்டால் அதோகதிதான்...

No comments:

Post a Comment