அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

அஞ்சறைப்பெட்டி

அஞ்சறைப்பெட்டி - 5

வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் பொழுது அனைவர் முன்னிலையிலும் பணத்தை வாங்கி எண்ண வேண்டியுள்ளது.இது திருடர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்தானே?
நாண்கு அல்லது ஐந்து அடி நீளமுள்ள மீன்பாடி வண்டிகளில் பத்து அடிக்கு மேலாக உள்ள கம்பிகள்,பைப்புகளை எப்படிப்பட்ட நெரிச்சலான போக்கு வரத்திலும் அனாசயாமாக கொண்டு செல்கின்றனர்.விளைவு பின்னால் வரும் வண்டிகளில் வருபவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது.நேற்று நடந்த இப்படிப்பட்ட விபத்தில் எங்கள் வீட்டிற்கு வரும் பிளம்பருக்கு கண்களில் செமத்தியான காயம் ஏற்பட்டு உள்ளது.போக்கு வரத்து போலீஸாரும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இப்பொழுதெல்லாம் ஹாஸ்பிடல் என்று போனால் அரை நாள் முழுதாக செலவாகி விடுகின்றது.அங்கு காத்திருப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டோ,அல்லது ஒலி வராமல் ஓடிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சியின் ஒளிக்காட்சிகளையோ அசுவாரஸ்யமாக பார்த்துகொண்டு இருக்க வேண்டியுள்ளது.சமீபத்தில் சென்ற ஒரு மருத்துவ மனையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தனர்.நமக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிக்கொண்டு பொழுதை இனிமையாக ஓட்ட ஏதுவாக இருந்தது.இதனை அனைத்து இடவசதியுள்ள பிற மருத்துவ மனைகள் பின்பற்றலாமே.

இப்பொழுதெல்லாம் சில முக்கிய பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பள்ளி விட்ட பிறகு போலீஸார் ரோந்து சுற்றுகின்றனர்.ஆங்காங்கு கும்பலாக நிற்கும் மாணவர்களை விரட்டிவிடுகின்றனர்.போலீஸார் தலை தெரிந்ததுமே கும்பலாக நிற்கும் மாணவ கூட்டம் சிட்டாக பறந்து விடுகின்றனர்.மாணவர்களை ஸ்நேகம் பிடிக்கும் முயற்சிக்கும் சமூக விரோதக்கூட்டத்தினரில் இருந்து பாதுகாப்பு கிடைகின்றது.வாழ்க சிட்டி போலீஸாரின் சேவை.

தங்கத்தின் விலை இப்பொழுது ஏறுமுகமாவே உள்ளது.சற்று விலை குறைந்தாலும் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாக உள்ளது.எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்கடையில் கூட்டத்திற்கு குறைவு இல்லை.பல கடைகளில் 1முதல் 5 சதவிகிதம் மட்டுமே சேதாரம் செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றனர்.இது அவர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகின்றது.தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

பீகாரில் பெரிய மூட்டையுடன் பதுங்கி பதுங்கி நடந்து சென்ற இருவரை போலீஸார் பிடித்து விசாரித்ததில் முட்டை நிரம்ப இறந்த காகங்களை வைத்து இருந்தனராம்.விசாரித்ததில் ரோட்டோர பாஸ்ட்ஃபுட் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்று இருக்கின்றனர்.இன்னொரு அதிர்ச்சி கரமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு காகங்களையும் எப்படி பிடித்தார்கள் என்று விசாரித்த பொழுது வெட்டவெளியில் உணவில் விஷம் கலந்து காகங்களை வேட்டை ஆடி விற்கின்றனராம்.விஷம் உண்டு இறந்த பிராணிகளின் இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் கதி.இறைவா!

No comments:

Post a Comment