அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

மாயாவதி - காலணி துப்பரவு செய்யும் மெய் பாதுகாவலர் (வெட்க கேடு )



மாயாவதி - காலணி துப்பரவு செய்யும் மெய் பாதுகாவலர்
இந்தியாவின் உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி அணிந்திருந்த காலணியை, அவரது மெய்பாதுகாவலர் ஒருவர் கைக்குட்டையால் துடைந்திருக்கும் சம்பவம்
பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சம் வைக்காத மாயவதி, இது நடைபெற்றுக் கொண்டிருக்கையில், சகஜமாக அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்திருக்கின்றார்.
பொது இடம் ஒன்றில் சில நிமிடங்கள் நீடித்த இச்சம்பவம் செய்தியாளர்களால் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இச் சம்பவம் மிகுந்த பரபரப்பு அடைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 1.8 மில்லியன் இந்திய ரூபாய்களிலான காசு மாலையினை இவருடைய ஆதரவாளர்கள் அணிவித்ததினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் காணும் இடங்களில், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், விழுந்து கும்பிடுவதை ரசித்து வருபவரும் ஒரு கட்சித் தலைவிதான் என்பதும் மறுப்பதற்கில்லை.

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

முன்னைய தளத்திற்கு செல்வதற்கு கிளிக்..

No comments:

Post a Comment