இதை எல்லோரும் நம்பவேண்டுமாம்
* எடியூரப்பாவிற்க்கு சொந்தமாக ஒரு (அப்ப நிறைய இருக்கோ ?) கார் கூட இல்லையாம். மொத்தமா வங்கியில் 33.5 லட்சம்தான் இருக்காம். சுவிஸ் வங்கியில் இல்லவே இல்லையாம் ( safety இல்லையோ !!) சோனியா அம்மையாருக்கேகார் இல்லையே அதையே நாம் நம்பலையா.
* ராசா ஏழைகள் நலன்கருதியே 2 ஜி அலைக்கற்றயை குறைந்த விலைக்கு விற்றாராம். அதை வாங்கிய கம்பனிகள் மிக குறுகிய காலத்திற்க்குள் அதை அதிக விலைக்கு விற்றுவிட்டதே என்று நீங்கள் கேட்டால் தமிழ்நாட்டில் இருக்க நீங்கள் தகுதியில்லை என்று அர்த்தம்.
* தமிழுக்காக தமிழ் நாட்டுக்காக பாடுபடும் ஒரே கட்சி பா ம க தானாம். அவர்களுடைய தமிழ் பற்றை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம் ஆனால் அன்புமணியின் பிள்ளைகள் தில்லியில் ஆங்கில வழி கல்வியில் படித்ததே என்று கேட்டால் உங்கள் கன்னங்கள் வீங்கிவிடும் ஜாக்கிரதை.
* நல்லாட்சியியை கூட ஊழல் சீரழித்துவிடும் என்று பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை யாருக்கு என்றுதான் புரியவில்லை. அவருடைய ஆட்சிதான் நடக்கிறது என்பதை யாராவது போய் சொன்னால் தேவலை. முதல்வரும் ஸ்டாலின் ஊக்கை விழுங்கினார் என்கிறார் அதனால் ஊக்கம் பெற்றார் என்கிறார் ஒரு இழவும் புரியமாட்டேன் என்கிறது. வயதாகிவிட்டால் இப்படிதானோ ?. எவ்வளவோ இளம், படித்த,தகுதிவாய்ந்தவர்கள் இருக்கையில் இப்படி தன்னால் சுயமாக நடக்கக்கூட முடியாத ஒரு முதல்வராக வேண்டும் என்று யார் அடம்பிடித்தது. இருந்தாலும் அயராமல் உழைக்கிறாராம்.
* கறுப்பு பணத்தை பற்றிய் தகவலை நீதிமன்றத்திற்க்கு தெரிவிப்பார்களாம் ஆனால் பெயரை வெளியிடமாட்டார்களாம். ஏன்னா அக்ரீமெண்டே அப்படித்தானாம்.
* ராசா ஏழைகள் நலன்கருதியே 2 ஜி அலைக்கற்றயை குறைந்த விலைக்கு விற்றாராம். அதை வாங்கிய கம்பனிகள் மிக குறுகிய காலத்திற்க்குள் அதை அதிக விலைக்கு விற்றுவிட்டதே என்று நீங்கள் கேட்டால் தமிழ்நாட்டில் இருக்க நீங்கள் தகுதியில்லை என்று அர்த்தம்.
* தமிழுக்காக தமிழ் நாட்டுக்காக பாடுபடும் ஒரே கட்சி பா ம க தானாம். அவர்களுடைய தமிழ் பற்றை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம் ஆனால் அன்புமணியின் பிள்ளைகள் தில்லியில் ஆங்கில வழி கல்வியில் படித்ததே என்று கேட்டால் உங்கள் கன்னங்கள் வீங்கிவிடும் ஜாக்கிரதை.
* நல்லாட்சியியை கூட ஊழல் சீரழித்துவிடும் என்று பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை யாருக்கு என்றுதான் புரியவில்லை. அவருடைய ஆட்சிதான் நடக்கிறது என்பதை யாராவது போய் சொன்னால் தேவலை. முதல்வரும் ஸ்டாலின் ஊக்கை விழுங்கினார் என்கிறார் அதனால் ஊக்கம் பெற்றார் என்கிறார் ஒரு இழவும் புரியமாட்டேன் என்கிறது. வயதாகிவிட்டால் இப்படிதானோ ?. எவ்வளவோ இளம், படித்த,தகுதிவாய்ந்தவர்கள் இருக்கையில் இப்படி தன்னால் சுயமாக நடக்கக்கூட முடியாத ஒரு முதல்வராக வேண்டும் என்று யார் அடம்பிடித்தது. இருந்தாலும் அயராமல் உழைக்கிறாராம்.
* கறுப்பு பணத்தை பற்றிய் தகவலை நீதிமன்றத்திற்க்கு தெரிவிப்பார்களாம் ஆனால் பெயரை வெளியிடமாட்டார்களாம். ஏன்னா அக்ரீமெண்டே அப்படித்தானாம்.
No comments:
Post a Comment