அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, April 16, 2011

போர்க்குற்றம்


ஒருபக்கம் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மௌனம் : மறுபக்கம் வரிசையாக அடுக்கப்படும் போர்க்குற்ற ஆதாரங்கள்!

AddThis Social Bookmark Button
இறுதியுத்தம் தொடர்பான, ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட போதும் பொதுமக்களுக்கு
பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது மனித உரிமை அமைப்புக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை தன்னிச்சையாக திரட்டி பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துவருகின்றன!

வி.புலிகளின் அரசியல்துறை, மற்றும் சமாதான செயலக பொறுப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள், தற்போது வெளியாகியிருக்கும் செய்மதி புகைப்படங்கள் என்பன அந்தவகையில் வெளிவந்த ஆதாரங்கள் ஆகும்.

நேற்று, சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர்.மனோகரன் இப்படுகொலைகளுக்கு இலங்கை இராணுவமே காரணம் என தெரிவித்திருந்தார்.

இப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தெரிவித்து 55,000 மக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்ட டாக்டர் மனோகரன் அதனையும் ஐ.நாவில் சமர்ப்பித்திருந்தார்.
(இவ்வீடியோ தொகுப்பினை பார்க்கும் போது, இத் தந்தையின் கண்ணீருடனான கோரிக்கையை வலுப்படுத்த தோன்றுகிறதா?)
ஐ.நா நிபுணர் குழு தயாரித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை  மக்களிடம் பகிரங்கப்படுத்துமாறு நீங்களும் கோரலாம்.
'சிறிலங்காவில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர். அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. குற்றவாளிகள் மட்டும் இன்னமும் தண்டிக்கப்படவில்லை'  என அனைத்துலக மன்னிப்பு சபையின் சிறிலங்கா தொடர்பான பிரதிநிதி போஸரும் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினரால் வன்னி மக்கள் மீது, நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மற்றுமொரு செய்மதி ஆதாரத்தை, த கிறிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் எனும் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக அவதானிக்க முடியவில்லை என்ற போதும், தமிழீழ வி.புலிகளின் மயானங்கள், பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மீது  இலங்கை படையினர் தாக்குதல் நடத்தியமையை தெளிவாக அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க வாஷிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science  நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது செய்மதிகளின் மூலம் யுத்த நிலவரங்களை சேகரித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியாக நம்புவதாகவும் புரோம்லி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு இதனை முற்றாக நிராகரித்துள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என த கிறிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.

சுமார் 450 மைல் உயரத்திலிருந்து இக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த செய்மதிகள் ஏற்கனவே கர்கிஸ்தான், மியன்மார், வடகொரியா, எதியோப்பியா கொங்கோ ஆகிய நாடுகளை சில தேவைகளுக்காக இரகசியமாக அவதானித்து வந்தது.

கடந்த வருடம் மெக்ஸிகோ எண்ணெய்க்கசிவு ஏற்பட்ட போது அதனையும் படம்பிடித்திருந்தது.
இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற கருத்துப்பட்டறையில், அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரை ஒன்றில்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக புள்ளிவிபரங்களுடன் அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், மே மாதம் 9 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் 25,000 தமிழ் மக்களுக்கு கொல்லப்பட்டுள்ளதாகவும் அவருடைய தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment