போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை பதுங்குகிறது : ஐ.நா பாயுமா?
ஐ.நாவின் நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டு, பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட, இலங்கை போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கை, விரைவில், பகிரங்கப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை அரசுக்கு மட்டும் பிரதியொன்று அனுப்பி வைக்கப்படும். பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த படாது என ஐ.நாவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரகசிய அறிக்கையில், இலங்கை அரசுக்கு பாதகமான பகுதிகள் மட்டும் இலங்கை உள்நாட்டு ஊடகமான தி ஐலண்ட் இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமிட்ட செயல் ஐ.நாவுக்கு வருத்தமளிப்பதாகவும், இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இதனை பகிரங்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இவ் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு ஊடகங்கள் மூலம் கசிந்திருந்த நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
1) எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தல்.
2) வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை.
3) மனிதாபிமான உதவிகளை மறுத்தமை,
4) இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை,
5) யுத்த வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்
ஆகிய ஐந்து பிரதான குற்றச் செயல்களில் இலங்கைப் அரசாங்கம் ஈடுபட்டதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.
1) பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை
2) புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை
3) பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை
4) பலவந்தமாக சிறுவர்கள் உள்ளிட்டவர்களை படையில் இணைத்துக் கொண்டமை
5) பலவந்தமாக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தியமை
6) தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை
உள்ளிட்ட ஆறு பிரதான குற்றச் செயல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைவான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட்டால் அது சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டமிட்ட செயல் ஐ.நாவுக்கு வருத்தமளிப்பதாகவும், இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இதனை பகிரங்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இவ் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு ஊடகங்கள் மூலம் கசிந்திருந்த நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
1) எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தல்.
2) வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை.
3) மனிதாபிமான உதவிகளை மறுத்தமை,
4) இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை,
5) யுத்த வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்
ஆகிய ஐந்து பிரதான குற்றச் செயல்களில் இலங்கைப் அரசாங்கம் ஈடுபட்டதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.
1) பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை
2) புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை
3) பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை
4) பலவந்தமாக சிறுவர்கள் உள்ளிட்டவர்களை படையில் இணைத்துக் கொண்டமை
5) பலவந்தமாக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தியமை
6) தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை
உள்ளிட்ட ஆறு பிரதான குற்றச் செயல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைவான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட்டால் அது சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்