அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, April 16, 2011

வவுனியா தடுப்பு முகாமில்


வவுனியா தடுப்பு முகாமில் உள்ள வி.புலிகளின் போராளிகள் பட்டியல் நாளை வெளியீடு?


வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வி.புலிகளின் முன்னாள் போராளிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை சிறிலங்கா அரசு நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பில் அரசாங்கத்தினதும் - தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் கடந்த 7ம் திகதி கொழும்பில் கூடி ஆராய்ந்ததை அடுத்து, நாளை வவுனியாவில் வைத்து, இவ் அறிக்கை சிறிலங்கா அரசினால் த.தே.கூ உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தரப்பின் சார்பில் வாஸ் குணவர்த்தன சமர்ப்பிக்கவுள்ளதுடன், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டு, தம்மிடம் இருக்கும் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அரசிடம் சரணடைந்த புலிகளின் சிரேஷ்ட்ட தலைவர்களின் விபரங்கள், இப்பட்டியலில் உள்ளதா என்பது நாளை தெரியவரலாம் என கருதப்படுகிறது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட வி.புலிகளின் முன்னாள் போராளிகள் பலர், இராணுவ புலனாய்வு நடவடிக்கைக்கு உதவுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுவிப்புக்கு பின்னரான கண்காணிப்பு என்ற போர்வையில், அடிக்கடி கைத்தொலைபேசிகளில் தொடர்புகொள்ளும் இராணுவத்தினர், தமது உள தேவைகளுக்கு, இவ்வாறான முன்னாள் போராளிகளை பயன்படுத்த முயற்சிப்பதால் அவர்கள் பலர் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வாளர்களின் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்ப்பதோ, அவர்கள் கேட்பதை செய்து கொடுப்பதற்குத் தவறுவதோ தமக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடக் கூடும் என்ற அச்சமும் முன்னாள் போராளிகளிடம் காணப்படுகிறது.

அதேநேரம் அவர்கள் கேட்கும் உளவுத்தகவல்களை பெற்றுக் கொடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஆயுதப் படைகளுடனும் தொடர்புகளைப் பேண எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் என்ன செய்ய, நான் விரும்புவது நடக்கவில்லை. நாட்டை விட்டு ஓடிவிட்டால் போதும் போல் உள்ளது என விடுவிக்கப்பட்ட போராளி ஒருவர் தம்மை போன்றோருக்கு நேர்ந்துள்ள கதியை கூறுகின்றார்.

No comments:

Post a Comment