அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Sunday, February 27, 2011

மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்


  6/6  

மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்

on சனி, 26 பிப்ரவரி, 2011
10.02.2011 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி  கீழ்காணும் மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  1. Nimesulide formulations for human use in children below 12 years.
  2. Cisapride and its formulations for human use.
  3. Phenylpropanolamine and its formulations for human use.
  4. Human Placental Extracts and its formulations for human use.
  5. Sibutramine and its formulations for human use.
  6. R-Sibutramine and its formulations for human use.

இவற்றில் பெரும்பாலான மருந்துகள் மற்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நிமுசுலைட்.  இது வலி நிவாரணியாகவும் சில சமயங்களில் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா (USFDA ), கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள்  இதை விற்க அனுமதியே அளிக்கவில்லை. ஈரல் குறைபாடு ஏற்படுவது உறுதியானதும் இந்த மருந்தைக் கண்டுபிடித்த ச்விசர்லாந்திலேயே குழந்தைகளுக்கு இம்மருந்து தடை செய்யப்பட்டது.  பங்களாதேசில் கூட 2005 லேயே இம்மருந்து தடைசெய்யப்பட்டது. 
 
மத்திய அரசின் அறிவிப்பு  இங்கே  

.

Thursday, February 24, 2011

ஏழைகளின்...!


ஏழைகளின்...!


உங்கள் எண்ணங்களையும் எமக்கு தெரிவியுங்கள்! மனமே வசப்படு வண்ணப்படங்களாக அவற்றை மாற்ற முனைகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி jeyaseelank.blogspot.com
மனதிற்கினிய  வாசகங்கள், உளம் மகிழும் காட்சிகள், இணைந்து வருகையில் வசப்படும் மனசு!

மனசாட்சியின் மரணம்


ஒரு மனசாட்சியின் மரணம்




ரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது -
ஆயினும்...........
கால் சுளுக்கிக் கொண்டது...!

ன் செயல் மெதுவாகவே
ஊடுருவியது நெஞ்சில்-
ஆயினும்...........
காயப்பட்டு விட்டது உயிர்....!

ண்பா!
படிப்பு கேட்டாய்
“ சாப்ட்வேர் ” என்றதும்
ஸ்நேகமாய் சிரித்தாய்...

ம்பளம் கேட்டாய்
சொன்னேன்...!

ர் கேட்டாய்
சென்னை என்றேன்...!

றவினர் பற்றி
உரசிப் பார்த்தாய் ...!

போய்விட்டாய் நேற்று...

ஜாதகக் கட்டுடன் வந்தாய்
தங்கை வரனுக்காய்...
என் ஜாதகமும் கேட்டாய்...!

றுபடியும்.,
பூர்வீகம் சொத்து
ஜாடையாய் கேட்டாய்...!

ன் போட்டோ  பார்த்து
புன்னகையில்
அஜீத் என்றாய்...!

ரு நாள்
விருந்துக்கு அழைத்து
ஒரு கிலோ  எடை கூட்டினாய்...!

ங்கையை அறிமுகம் செய்து
அவள் கனவில்
என்னை தைத்தாய்
என்  நெஞ்சில்
அவளை விதைத்தாய்...!
னிதாவின் மாடர்ன் ஆர்ட் ”
புரியாத பெயின்டிங்கை
புலம்பிவிட்டு போனாய்...!

னிதா போட்ட கோலம்”
இடியாப்பக் கோடுகளை
என் மீது  திணித்தாய்...!

ங்கை  சமைத்த குழம்பு ”
உணவு இடைவேளையில்
லஞ்சமாய் கொடுத்தாய்...!

ரவுக் கனவுகளில்
இருவரையும் சரசிக்கவிட்டு
ஏக்கக்  கூண்டில்
குருவியை அடைத்தாய்;
இப்போது
சிறகுகள் வேண்டும்.... இல்லை
திருமணம் வேண்டும்...!

த்திரிக்கை அடிக்க
பணம் கேட்டாய்
கொடுத்தேன்...!

ந்தல் அட்வான்ஸ்
மேளம், தாலி முன்பணம்
வெற்றுச் “செக்” காய்
வாங்கிப் போனாய்...!

மோதிர அளவுக்கு
விரலைக் கேட்டாய்;
கடிகார அளவுக்கு
கை கேட்டாய்...!

“ஷு ” அளவுக்கு
கால் கேட்டாய்;
அச்சு திருத்துமுன்
அப்பா பேர்கேட்டாய்;

ஓ.......................!
கடைசியில் அதையும்
கேட்டுவிட்டாய் நண்பா !

ஜாதி,

நின்று போனது கல்யாணம் மட்டுமா ?
என் நெஞ்சும் கூடத்தான்.

ன் தங்கை இப்போது
கல்யானமாகாத விதவை,

போ..... நண்பா......போ !
இன்னும்
ஜாதக கட்டுகளுடன் -
விதவைக்கு மாப்பிள்ளை வேண்டும்
விளம்பரம் கொடு.......!

ம்.......
ஒரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது
ஆயினும்...........
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....                           ஜெயசீலன்
 


தி.மு.க. ஆட்சியில் உருவான புதிய கல்வித் தந்தைகள்!

தி.மு.க. ஆட்சியில் உருவான புதிய கல்வித் தந்தைகள்!

23-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.

''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.


ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார்.

''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக் கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.
 

'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.

வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.


முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.


ஆக மொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

- நன்றி : ஜூனியர்விகடன் - 27-02-2011

இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை

  11/11 

இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை


மெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.

திலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன?

ந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்; நமக்கும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது; இருக்காதா?

ந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் கவலைப்படவில்லை.

மெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை.

னால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?( அமெரிக்கா செய்த அவமானங்கள் அனைவரும் அறிந்ததே, அதை சேர்த்தால் பதிவு பெரிதாகிவிடும்)

ப்படிப்பட்ட வெளியுறவுத் துறை எந்த நாட்டிலாவது இருக்கிறதா? 

ளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.

லங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த சில நாள்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மீனவ மக்களிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தூண்டி விடுகிறது. எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதுவரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

னால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

ங்கே தமிழர்களுக்கென ஓர் அரசு இருக்கிறது; தமிழகத்தைச் சேர்ந்தவரே உள்துறை அமைச்சராக இருக்கிறார். இன்னும் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா?

லங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.

1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது.(நன்றி தினமணி)

பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.

முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
                                              2. சித்தாள் வாழ்ந்த இடம்
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  
 

Wednesday, February 23, 2011

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி


தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறி ய  
கருணாநிதி
*கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம்
80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *
*
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம்
வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.*
*
*
* இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து
கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா
பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி
அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன்
விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு
கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள்
குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது
செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது
குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம்.
குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய
துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு
சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு
மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த
பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக
பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும்
பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய்
பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய்
விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி
அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர்
செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில்
குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32
கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர்
தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை
நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ்
சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர்
மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties  after semmuzi   coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)*
*51.மிக பெரிய சில கல்லூரிகள் சில இவர்கள் வசம் இருக்கின்றன.*
*
*
* இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.*
***இன்னும் பல துறைகளில் பெரிய நபர்களை மிரட்டி அவர்களின் சொத்துகளை பறித்து
வரும் வழிப்பறி திருடர்கள் இவர்கள். **இன்னும் கணக்கில் வராத சொத்துக்கள் பல**
 .*
*
*
*திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை
நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய அல்ல
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கின்றனர்.*
*
வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்*


இனியும் இவர்களை  ஆட்சிக்கு வர விடுவது  தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையே
விற்றுவிடுவார்கள்.  எனவே ஒரு நல்ல அரசியல் தலைவரை தேர்வு செய்வது  நமது கடமை
'இல்லை இல்லை' கட்டாயம்.  இல்லையென்றல் உங்கள் வீடு சொத்து முதலியவற்றை
கூட அவர்கள் வசம் ஆக்குவது வெகு தொலைவில் இல்லை.

இனிமேலாவது உங்களால் முடிந்த வரை இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது
உறவினர்களுக்கோ நேரிலோ அல்லது மெயில் வழி பரிமாற்றம் செய்து நம் நாட்டினை
காப்போம். நம் நாடு நமது சொத்து அதை காப்பது நமது முக்கிய கடமை.

Tuesday, February 22, 2011

திருமாவளவனை திருப்பியது,


திருமாவளவனை திருப்பியது, இந்திய அழுத்தத்திற்கு எதிரான இலங்கையின் அதிரடி நடவடிக்கை?

இன்று வல்வெட்டித் துறையில் நடைபெறும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக
இலங்கை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான, திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச  விமான நிலையத்தில் வைத்து,  அதே விமானத்தில் அவர்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்திய மீனவர் பிரச்சினை யாழ்ப்பாணப்பகுதிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில்,  இந்தியப் பிரதிநிதிகள்  யாழ்ப்பாணம்  செல்வது நல்லதல்ல என்ற  காரணத்தினாலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்  என இலங்கைக் குடிவரவுத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமாவளவன் குழுவினர் சென்னை திரும்பியதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருமாவளவன் தலைமையில், சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தை முற்றுகையிட முனைந்தனர். இதன் போது திருமாவளன் உட்பட 300 விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டதாகச் சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கை வந்த திருமாவளவன் குழுவினர் அரசியல்வாதிகள் என்பதோ, அவர்கள் பார்வதியம்மாள் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள வந்திருந்ததாகவோ தாம் அறிந்திருக்கவில்லை எனவும், திருமாவளவன் பார்வதி அம்மாள் இறுதிக் கிரிகைளில் கலந்து கொள்வதற்காக மீண்டும் இலங்கை வந்தால் அவர் அனுமதிக்கப்படுவார் என்றும்  குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க இந்திய மீனவர்கள் பிரச்சனையில் கடுமையான அழுத்தங்களை இந்தியா இலங்கை மீது பிரயோகித்தமைக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை இலங்கை அரச தரப்பு மேற்கொண்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை தமிழக அரசியல்வாதிகளை இலங்கை அரசு ஒரு போதும்  மதிப்பதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, February 20, 2011

விஞ்ஞானப்பூர்வமாக ஊழல்


கலைஞர் கருணாநிதி விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவரா..?


11-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'இரண்டு ஆடுகள் முட்டிக் கொண்டால் நரிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றிப் போட்டுப் படியுங்கள். 'இரண்டு நரிகள் முட்டிக் கொண்டால் ஆட்டிற்குக் கொண்டாட்டம்' என்று..!!!

நேற்றைக்கு ஜெயலலிதா விடுத்திருக்கும் ஒரு அறிக்கையைப் படித்தபோது இதுதான் எனக்குத் தோன்றியது.. கருணாநிதி ஜெயலலிதாவைத் திட்ட, ஜெயலலிதா பதிலுக்கு கருணாநிதியைத் திட்ட.. இப்படி இரண்டு பேரும் மாறி, மாறி ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு காட்டிக் கொடுப்பதால், இவர்கள் செய்த அரசியல் கொள்ளைகளும், தில்லுமுல்லுகளும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன. 

அந்த வரிசையில் ஜெயலலிதா நேற்று விடுத்திருக்கும் அறிக்கையினால் கருணாநிதியை “விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்” என்று நீதிபதி சர்க்காரியா ஏன் குறிப்பிட்டார் என்பதற்கான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. நீங்களும் படித்துப் பாருங்கள்..!

"மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என்று வருகிறபோது, 1969-ம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்றுவரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி.

ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மூன்றாவது மனைவியான திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ.57,000 விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் திருமதி தர்மா.

இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே.கபாலிக்கு விற்றுவிட்டார்  திருமதி தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே.கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற திருமதி தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன்னால் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்.

அதே நாளன்று, டி.கே.கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு திருமதி தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்கியம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். திருமதி தர்மாவின் தாயார்தான் இந்த சிவபாக்கியம்!! அதாவது கருணாநிதியின் மாமியார். இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.

20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்கியம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், தன்னுடைய சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் கையிருப்புத் தொகை ரூ 63,000 என்றும் திருமதி தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ.57,000 கொடுத்துதான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது.

கடனாகப் பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தின்படி, கடனாக வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்திட்டு இருக்கிறார்.

பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் திருமதி தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுவிட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், திருமதி தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞானபூர்வமான ஊழல்கள்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்திற்கு, அரிதான 2-ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையான ரூ. 1,537 கோடிக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அளித்தார். இதற்குப் பிறகு, டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ 4,200 கோடிக்கு விற்றது.

இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் எஜமானரும், குருவுமான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் லஞ்சம் கொடுத்தார். ஆனால், இந்தப் பணம் நேரடியாக கொடுக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ 25 லட்சம் முதல் ரூ 100 கோடி வரை, சேர்த்து, மொத்தம் ரூ 209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான குசேகான் ஃப்ரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ் என்ற நிறுவனத்திற்கு பால்வா மாற்றியிருக்கிறார்.

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ. 206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறது. இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010ம் ஆண்டைய இருப்பு நிலைக் குறிப்பை பார்க்கும்போது, கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியும் சேர்ந்த 80 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த கலைஞர் டி.வி.க்கு உத்திரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் ஒத்திருப்பதுதான் இதில் விசேஷமான ஒன்று. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை. அதே மூளைதானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!.

கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்பொழுதுதான் நீதி நிலைநாட்டப்படும்..”

- இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமதி தர்மா, சிவபாக்கியம், டி.கே.கபாலி ஆகியோர் இணைந்த கூட்டணியின் விற்றல், வாங்கல் கதையை பதினைந்து முறைக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். தலைதான் சுற்றுகிறது..!

யாரேனும் அறிவுஜீவிகள் அதனைப் படித்து அதற்குச் சரியான விளக்கமளித்தால் சந்தோஷப்படுவேன்..!

இதுக்கெல்லாம் எங்கிட்டு போய் விஞ்ஞானத்தைப் படிச்சிட்டு வர்றது..? சொல்லுங்க..!!!

  


மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்



மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்


ந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.

னால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.

மிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை  - நன்றி எஸ்.ரவீந்திரன்.

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

 னி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

 ன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
வாக்காளர்கள் ஆகிய நாம் இன வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

கலைஞரின் நியூ ராஜராஜசோழன்


கலைஞரின் நியூ ராஜராஜசோழன்!

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களைக் கலைஞர் டிவி கச்சிதமாக ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். தைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் இருந்தே,
திட்டமிட்டவகையில் இந்தப் பிரச்சாரப் பணி வெகு இயல்பாக ஆரம்பித்துவிட்டதாகவும், இம்முறை தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒலிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் பாடல் ஒன்று, கலைஞர் டிவியில் ரசிகன் நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், அதே தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் விபரம் அறிய வீடியோவில் ஏட்டாவது நிமிடத்தில் வரும் பாடலைக் கேளுங்க
நீங்க பார்த்த பாடலுக்கும் இனிவரும் விளம்பரத்துக்கும், கருத்து ஒற்றுமை இருக்கிறது கண்டுபிடியுங்க பார்க்கலாம்...
முடியல்லையா..? பேசாம விடுங்க...உங்க தலைமேல் எழுத்த மாத்த முடியாது.
.