அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, December 14, 2010

புதுக் கவிதை

             கண்கள்


காதலுக்கும் கண்ணில்லை
கடவுளுக்கும் கண்ணில்லை
இருப்பாயின் இப்பூவுலகில்
மாந்தர் பலர் உயிர் வாழ்வதில்லை

ஒரு ஏழை சிறுவனின் கேள்வி

பல்லி சொல்லும் பலனை
பஞ்சாங்கத்தில்
பார்க்க தெரிந்த என் தந்தைக்கு
நான் பள்ளி செல்லும் பலன் மட்டும்
தெரியாமல் போனதெப்படி?

வார்த்தை பூக்கள்

வார்த்தை பூக்கள் பூத்தன
ஆயிரம் என் மனதில்
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை
அருகினில் நீ வந்த போது
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில்.....







No comments:

Post a Comment