அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Friday, December 30, 2011



என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!!



Saturday, November 5, 2011

என் மாவட்டம் இராமநாதபுரம்



இராமநாதபுரம்

இன்றைய பதிவு 'தென்னிந்தியாவின் காசி' என்று புகழப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தைப் பற்றியது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களுள் இராமநாதபுரமும் ஒன்று.

1910-ல் திருநெல்வேலி,  மதுரையின் சில பகுதிகளை இணைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கபட்டது.  பிரிட்டீஷார் காலத்தில் 'இராம்நாட்' என்று வழங்கப்பட்ட இது, சுதந்திரத்திற்குப் பின்பே தமிழில் இதற்கிணையான இராமநாதபுரம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

சுருக்கமான தகவல்கள்:


தலைநகர்
 இராமநாதபுரம்
பரப்பு
 4089 .கி.மீ.
மக்கள் தொகை
 11,87,604
ஆண்கள்
 9,83,376
பெண்கள்
 6,04,228
மக்கள் நெருக்கம்
 284
ஆண்-பெண் விகிதம்
 1,036
எழுத்தறிவு விகிதம்
 72.96%
இந்துக்கள்
 9,28,090
கிருத்துவர்கள்
 84,092
இஸ்லாமியர்
 1,74,079


இராமநாதபுரம் மாவட்டத்திற்கான இணையதளம்


ஆட்சியர் அலுவலகம்


மின்னஞ்சல்: collrrmd@tn.nic.in
தொலைபேசி: 04567-231220


வருவாய் கோட்டங்கள் இரண்டு: 1. இராமநாதபுரம், 2. பரமக்குடி,

தாலுகாக்ககள் ஏழு: 1. இராமநாதபுரம், 2. இராமேஸ்வரம், 3. திருவாடானை, 4. பரமக்குடி, 5. முதுகுளத்தூர், 6. கமுதி, 7. கடலாடி.

நகராட்சிகள் நான்கு: 1. இராமநாதபுரம், 2. பரமக்குடி, 3. கீழக்கரை, 4. இராமேஸ்வரம்

ஊராட்சி ஒன்றியங்கள் பதினொன்று: இராமநாதபுரம், திருப் புல்லாணி, மண்டபம், ராஊசிங்க மங்கலம், திருவாடானை, பரமக்குடி, போகலூர், நைனார் கோவில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி.

முக்கிய ஆறுகள்: வைகை, மற்றும் குண்டாறு

குறிப்பிடத்தக்க இடங்கள்:  'தர்பசயணம்' என்றழைக்கப்படும் திருப்புல்லாணி பெருமாள் கோயில், கிருத்துவர்கள் போற்றி வணங்கும் 'ஜான் டீ பிரிட்டோவின்ய ஒரியூர் சர்ச்.

அக்னி தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலிலிருந்து 100 மீ.தொலைவில் அமைந்தள்ளது.  இதில் ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் கரைந்த போகும் என்பது நம்பிக்கை.

ஏர்வாடி தர்கா:

அரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இப்ராஹிம் செய்யத் அலி சுல்தான் நினைவாக இந்தக் கல்லறை எழுப்பப்பட்டது.  சந்தனக்கூடுத் திருவிழா பிரபலமானது. மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அற்புத்த் தலம்.

இருப்பிடமும், சிறப்புகளும்.


v  சென்னையிலிருந்து 510 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
v  தேவிப்பட்டினம் (நவபாஷாணம்) இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் கடலோரக் கிராமம்.
v  இராமேஸ்வரம் கோவில் உலகிலேயே மிக நீளமான சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டது.
v  ஜோதிர்லிங்க தளங்களில் ஒன்று.
v  அன்னை இந்திரா காந்தி பாலம் (பாம்பன் பாலம்)இராமேஸ்வரம் தீவை இணைக்கும் 2.2 கி.மீ. நீள பாலம். ஒரு வளைகுடாவின் மீது அமைக்கப்படும் இந்தியப் பாலங்களில் இதுவே மிக நீளமானது.
v  மன்னார் வளைகுடா கடலுயிரி காப்பகம்;  இந்தியாவின் முதல் கடலுயிரி காப்பகம். சுமார் 3600 இன கடல் உயிரிகள் இப்பகுதியில் உள்ளதாக்க் கூறப்படுகிறது.
v  குறிப்பிடத்தக்கோர்: முத்துராமலிங்க சேதுபதிபாஸ்கர சேதுபதி,வள்ளல் சீதக்காதிமுத்துராமலிங்கத் தேவர்டாக்டர் அப்துல்கலாம்.